Connect with us

ஒரே சம்பளத்தை கொடுத்து ரெண்டு படம் எடுத்தா எப்புடி? எஸ்.ஜே சூர்யாவுக்கே விபூதி அடித்த இயக்குனர்!..

director shankar sj surya

News

ஒரே சம்பளத்தை கொடுத்து ரெண்டு படம் எடுத்தா எப்புடி? எஸ்.ஜே சூர்யாவுக்கே விபூதி அடித்த இயக்குனர்!..

Social Media Bar

SJ Surya : சினிமாவைப் பொறுத்தவரை அதில் சின்ன சின்ன நடிகர்களுக்கு தான் தினசரி சம்பளம் என்கிற வகையில் சம்பளம் வழங்கப்படும். பெரிய நடிகர்களுக்கெல்லாம் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் என்று படம் துவங்கும்போதே பேசப்பட்டுவிடும்.

அந்த படத்திற்க்கான சம்பளத்தை அவர்கள் பெற்றுவிட்டு படம் எவ்வளவு நாட்களாக இருந்தாலும் நடித்துக் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ரஜினிகாந்த் தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு சம்பளமாக அவர் 150 கோடி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் மேலாகியும் கூட படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது.

indian-2
indian-2

ரஜினிகாந்த் நடித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படி எவ்வளவு நாள் ஆனாலும் நடித்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் சம்பள விஷயத்தில் நடிகர்களிடம் சரியாக இருக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இந்தியன் 2 திரைப்படத்தைப் பொறுத்தவரை எஸ். ஜே. சூர்யாவிற்கு அதில் அநீதி நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏமாற்றப்பட்ட எஸ்.ஜே சூர்யா:

அதில் எஸ்.ஜே சூர்யா விற்கும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு வெகு நாட்களாக நடந்தது. இதில் நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதால் இந்த ஒரு படத்தையே இரண்டாக பிரித்து இந்தியன் இரண்டு மற்றும் மூன்று என இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று பேச்சுக்கள் இருந்தன.

இந்த நிலையில் மூன்றாம் பாகத்திற்கான பாடப்பிடிப்பையும் சேர்த்து எடுத்து வருகிறார். இயக்குனர் சங்கர். இதற்காக இயக்குனர் சங்கர் மற்றும் கமலஹாசன் இருவருக்குமே இரண்டு திரைப்படங்களுக்கான சம்பளத்தை வாங்கி இருக்கின்றனர் நிறுவனத்தினர்.

sj-surya
sj-surya

ஆனால் மற்ற நடிகர்கள் யாருமே இரண்டு படத்திற்கான சம்பளத்தை வழங்கவில்லை. அதனால் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஒரு திரைப்படத்திற்கான சம்பளமே வழங்கப்பட்டிருக்கின்றன.

இருந்தாலும் இது கமல்ஹாசன் திரைப்படம் என்பதால் ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் இருவரும் எந்த கேள்வியும் கேட்காமல் நடித்து வருகின்றனர். எஸ்.ஜே சூர்யாவை பொருத்தவரை அவருக்கு இதில் மன வருத்தம் இருப்பதாக கூறப்படுகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top