Connect with us

அந்த படம் ஓடலைனா ஹோட்டலுக்கு சர்வர் வேலைக்கு போக இருந்தேன்!.. எஸ்.ஜே சூர்யாவை காப்பாற்றி விட்ட படம்!..

sj suriya

Cinema History

அந்த படம் ஓடலைனா ஹோட்டலுக்கு சர்வர் வேலைக்கு போக இருந்தேன்!.. எஸ்.ஜே சூர்யாவை காப்பாற்றி விட்ட படம்!..

Social Media Bar

வாலி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. வாலி, குஷி ஆகிய இரண்டு திரைப்படங்களை மட்டும் தான் மற்ற நடிகர்களை வைத்து இயக்கினார்.

அதற்குப் பிறகு அவர் இயக்கும் படங்களில் அவரே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து அவர் அதற்கு அடுத்த படம் நியூ பிறகு அன்பே ஆருயிரே என்கிற திரைப்படத்தில் எல்லாம் அவரே இயக்கி நடித்தார். இந்த நான்கு திரைப்படங்களுமே எஸ்.ஜே சூர்யாவிற்கு பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்கள்.

ஆனால் நியூ படத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட சிரமங்கள் சற்று அதிகமானது. அது குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது நியூ திரைப்படத்தை இயக்கும் பொழுது அதுவரை எஸ்.ஜே சூர்யா சம்பாதித்து இருந்த அனைத்து பணத்தையும் நியூ திரைப்படத்திற்காக செலவு செய்தார்.

அந்த திரைப்படம் மட்டும் ஒரு வேலை ஓடவில்லை என்றால் பழையபடி ஹோட்டலுக்கு சர்வர் வேலைக்கு சென்றுவிடலாம் என்று முடிவெடுத்திருந்தார். அந்த அளவிற்கு தீர்க்கமாக நியூ திரைப்படத்தை நம்பி இருந்தார் எஸ்.ஜே சூர்யா.

அதே போலவே அந்த திரைப்படமும் திரையில் வெளியான பிறகு அவர் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியையும் கொடுத்தது சில சர்ச்சைகளையும் கொடுத்தது. ஆனால் எஸ்.ஜே சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் இப்போது வரை நியூ ஒரு முக்கியமான திரைப்படமாகவே உள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top