Connect with us

நயன்தாரா சுந்தர் சி பிரச்சனை..! பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு..!

Tamil Cinema News

நயன்தாரா சுந்தர் சி பிரச்சனை..! பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் நடிகை நயன் தாரா மிக முக்கியமான நடிகை ஆவார். பெரும்பாலும் நடிகை நயன் தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களைதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த படங்கள் எதுவுமே பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை.

எனவே நடிகை நயன் தாரா தற்சமயம் கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளார். போன வருடம் அவரது நடிப்பில் வெளியான அன்னப்பூரணி திரைப்படம் அதிக சர்ச்சைக்கு உள்ளானது பலரும் அறிந்த விஷயமே.

ஆனால் அதற்கு பிறகு பாலிவுட்டில் அவர் நடித்த ஜவான் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. மேலும் ஒட்டு மொத்த திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரமாக நயன்தாராவின் கதாபாத்திரம் இருந்தது. இந்த நிலையில் அடுத்து தமிழில் அவர் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்க துவங்கியுள்ளார்.

நயன் தாரா நடிப்பில் வெளியான திரைப்படங்களில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு தனி செல்வாக்கு உண்டு. அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்க உள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி இந்த படத்தை இயக்க துவங்கியது முதலே திரைப்படம் தொடர்பாக சில பிரச்சனைகள் சென்று கொண்டுள்ளன. இந்த நிலையில் நயன் தாராவுக்கும் சுந்தர் சி க்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

இதற்கு பதிலளித்த குஷ்பு கூறும்போது தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நல்லப்படியாக சென்றுக்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top