Connect with us

கிட்ட கூப்பிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய இயக்குனர்… சுந்தர் சிக்கு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..

News

கிட்ட கூப்பிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய இயக்குனர்… சுந்தர் சிக்கு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..

Social Media Bar

சுந்தர் சி தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே பயணித்து வரும் ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். முறைமாமன் திரைப்படம் மூலமாக இயக்குனரான சுந்தர் சி அதற்கு பிறகு நிறைய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

முக்கியமாக ஒரு காமெடி இயக்குனராக அனைவராலும் அறியப்படுபவர் சுந்தர்சி. சுந்தர் சி பெரும்பாலும் இயக்கும் திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் இருக்கும். அவை அவருக்கு பெரும் வெற்றியையும் பெற்று கொடுத்திருக்கின்றன.

சுந்தர் சி பிரபலம்:

அதே சமயம் வேறு மாதிரி திரைப்படங்களும் அவர் சிறப்பாக இயக்கக் கூடியவர். உதாரணத்திற்கு அரண்மனை திரைப்படத்தை சுந்தர் சிதான் இயக்கியிருந்தார்.

sundar-c
sundar-c

அது அதிக அளவு வரவேற்பு பெற்ற திரைப்படமாக இருந்தது அதேபோல அன்பே சிவம் அருணாச்சலம் மாதிரியான திரைப்படங்களையும் சுந்தர் சிதான் இயக்கினார். இவர் தமிழ் சினிமாவில் எடுத்த உடனே இயக்குனர் ஆகிய விடவில்லை.

அப்பொழுதெல்லாம் அவ்வளவு எளிதாக இயக்குனராக முடியாது அதற்கு ஏற்கனவே வேறு சில இயக்குனர்களிடம் சில படங்களிலாவது பணி புரிந்திருக்க வேண்டும். இப்பொழுது போல படங்களிலேயே பணி புரியாமல் இயக்குனரான இயக்குனர்கள் அப்போது வெகு சிலர் தான் இருந்தனர்.

ஆரம்பக்காலம்:

sundar-c
sundar-c

இந்த நிலையில் சுந்தர் சி இயக்குனர் மணிவண்ணனிடம் தான் உதவி இயக்குனராக அப்பொழுது பணிபுரிந்து வந்தார். அந்த சமயத்தில் மணிவண்ணன் சுந்தர்சியை கெட்ட வார்த்தைகளில் எல்லாம் திட்டுவாராம் மேலும் பட வசனங்களை கூட அப்படித்தான் கூறுவார் என்று கூறுகிறார் நடிகர் சரத்குமார்.

மணிவண்ணன் சுந்தர் சி காதில் ஏதோ கூறிவிட்டு சென்றுள்ளார் உடனே சரத்குமார் என்ன வசனம் கூறினார் என்று கேட்டிருக்கிறார் அதற்கு சுந்தர் சி வசனம் எல்லாம் கூறவில்லை கெட்ட வார்த்தையில் திட்டினார் என கூறியுள்ளார். இந்த சம்பவத்தை சரத்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்தார்.

To Top