Latest News
சூர்யா அடுத்த படம் யார் கூட? வெளியான அப்டேட்!
சூர்யா தற்சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் படத்தில் பல கதாபாத்திரங்களில் நடிக்கிறார் சூர்யா. மேலும் இந்த படத்தின் ஃப்ரஸ்ட் லுக் மோஷன் போஸ்டரும் கூட அதிக வரவேற்பை தூண்டும் விதமாக இருந்தது.
தற்சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டன. இதற்கிடையே சூர்யாவை வைத்து சூரரை போற்று என்ற ஹிட் படம் கொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா ஒரு யோசனையில் இருந்தார்.
அதாவது தொழிலதிபர் ரத்தன் டாடாவின் கதையை தமிழிலும் ஹிந்தியிலும் படமாக்கலாம் என முடிவெடுத்தார். தமிழில் சூர்யாவை வைத்து எடுக்க திட்டமிட்டார் சுதா கொங்கரா.
அதே சமயம் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலும் கூட சூர்யாவை வைத்து ஜெய்பீமின் அடுத்த பாகம் எடுக்க இருக்கிறார்.
இந்நிலையில் சூர்யா தற்சமயம் சுதா கொங்கரா படத்தில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் துவங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த படத்தை முடித்த பிறகுதான் ஜெய் பீம் படத்தின் இரண்டாம் வேலைகள் துவங்கும் என கூறப்படுகிறது.