Connect with us

சூர்யா தனுஷ் ரசிகர்களிடம் சிக்கிய இயக்குனர்.. வாயை விட்டதால் வந்த வினை..!

Tamil Cinema News

சூர்யா தனுஷ் ரசிகர்களிடம் சிக்கிய இயக்குனர்.. வாயை விட்டதால் வந்த வினை..!

Social Media Bar

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அதிக வரவேற்பு பெற்ற படமாக லவ் மேரேஜ் என்கிற திரைப்படம் இருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருந்தார்.

திருமணம் செய்யும் பொழுது அதில் நடக்கும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் அமைந்து இருந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சண்முகப்பிரியன் இயக்கியிருந்தார்.

சமீபத்தில் அவர் பேசிய விஷயங்கள்தான் அதிக வைரலாகி வருகிறது சமீபத்தில் ஒரு பேட்டியில் சண்முகப்பிரியன் பேசும்பொழுது சிவகார்த்திகேயன் குறித்த ஒரு விஷயத்தை பேசி இருந்தார்.

அதாவது சிவகார்த்திகேயன் சமீப காலங்களாக வெற்றி படங்களை கொடுத்து வரும் புதிய இயக்குனர்களை அழைத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இது குறித்து பேசிய சண்முக பிரியன் கூறும்பொழுது சிவகார்த்திகேயன் இப்படி செய்யும் பொழுது அதை பலரும் விமர்சனம் செய்கின்றனர்.

அதுவே தனுஷ் அல்லது சூர்யா செய்யும் பொழுது அவர்களை வாழ்த்தி பேசுகின்றனர். விமர்சிக்க வேண்டும் என்றால் அவர்களையும் விமர்சிக்க வேண்டும்தானே என்று கேட்டிருந்தார். இதனால் கோபமடைந்த தனுஷ் மற்றும் சூர்யா ரசிகர்கள் இப்பொழுது சண்முகப்பிரியனை தொடர்ந்து விமர்சிக்க துவங்கியிருக்கின்றனர்.

To Top