Connect with us

பல வருடங்களுக்கு முன்பே பிரிந்த கார்த்தியின் காதல்.. பழசை மறக்காமல் பார்க்க வந்த காதலி!..

karthi

Cinema History

பல வருடங்களுக்கு முன்பே பிரிந்த கார்த்தியின் காதல்.. பழசை மறக்காமல் பார்க்க வந்த காதலி!..

Social Media Bar

சூர்யாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆனாலும் கூட கார்த்தி வெகு சீக்கிரமாகவே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார். ஒரே மாதிரி படங்களில் நடிக்காமல் தொடர்ந்து வெவ்வேறு வகையான திரைப்படங்களில் நடித்து வந்தார் கார்த்தி.

கார்த்தியின் தந்தையான சிவக்குமார் காதலுக்கு எதிரான மனநிலை கொண்டவராவார்.  மேலும் தன்னுடைய சாதி மீது அதிக பற்று கொண்டவர் என கூறப்படுகிறது. அவரது முதல் மகன் சூர்யா காதல் திருமணம் செய்து கொண்டதையே சிவக்குமாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தனது இரண்டாவது மகனையாவது தன்னுடைய சாதியில் திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார் சிவக்குமார்.

இதற்கு நடுவே கார்த்தி நடித்த இரண்டாவது திரைப்படம் பையா. பையா திரைப்படத்தில் நடிகை தமன்னா இவருக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு சிறுத்தை, தோழா போன்ற படங்களிலும் இருவரும் சேர்ந்து நடித்தனர். இவர்கள் இருவருக்குள்ளும் இதற்கிடையே காதல் ஏற்பட்டது. ஆனால் சிவக்குமார் சம்மதிக்காத காரணத்தால் அவர்கள் பிரிந்துவிட்டனர்.

பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதே இல்லை. இந்த நிலையில் தற்சமயம் ஜப்பான் திரைப்படத்தின் விழா ஒன்று நடந்தது. இந்த விழாவிற்கு நடிகை தமன்னாவும் வந்திருந்தார். காதல் முறிவு ஏற்பட்டு இத்தனை வருடம் கழித்தும் தமன்னா கார்த்தியுடன் நட்பில்தான் இருக்கிறார் என இதுக்குறித்து சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் சென்று கொண்டுள்ளன.

Articles

parle g
madampatty rangaraj
To Top