Connect with us

வடிவேலு படத்தால் எட்டு வருஷம் சினிமாவை விட்டே போயிட்டேன்!. கண்ணீர் சிந்திய இயக்குனர்..

vadivelu eli

Cinema History

வடிவேலு படத்தால் எட்டு வருஷம் சினிமாவை விட்டே போயிட்டேன்!. கண்ணீர் சிந்திய இயக்குனர்..

Social Media Bar

தமிழில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. ராஜ்கிரண் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வடிவேலு. தனது தனிப்பெறும் நகைச்சுவை திறனால் எக்கச்சக்கமான திரைப்படங்களில் காமெடியனாக நடித்தார் வடிவேலு.

வெகு நாட்களாக காமெடி நடிகனாக நடித்ததை அடுத்து ஏன் கதாநாயகனாக நடிக்க கூடாது என முடிவெடுத்தார் வடிவேலு, அதனை தொடர்ந்து காமெடி கதாநாயகனாக 23 ஆம் புலிகேசி என்னும் படத்தில் நடித்தார் வடிவேலு.

அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதில் இயக்குனர் யுவராஜ் இயக்கிய எலி திரைப்படமும் அடங்கும். இதுக்குறித்து இயக்குனர் யுவராஜ் கூறும்போது எலி படம் முடிந்து ரசிகர்கள் வந்தப்போது அவர்களிடம் படம் எப்படி உள்ளது என கேட்டேன்.

ஆனால் அதற்கு அவர்கள் பதிலே அளிக்கவில்லை. அதை வைத்தே என் படம் சுமாராகதான் இருக்கிறது என்பதை அறிந்துக்கொண்டேன். அதன் பிறகு எனக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு வாய்ப்பை பெற்றுள்ளேன் என அவர் கூறினார். இவர் தற்சமயம் இருகப்பற்று என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

To Top