Connect with us

தமிழில் இவர்தான் முதன் முதலில் 1 லட்சம் சம்பளம் வாங்கினார்… ஆனால் சந்திரபாபு கிடையாது!..

chandrababu

Cinema History

தமிழில் இவர்தான் முதன் முதலில் 1 லட்சம் சம்பளம் வாங்கினார்… ஆனால் சந்திரபாபு கிடையாது!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் எப்போதுமே நடிகர்களுக்குள் ஒரு போட்டி இருக்கும் என்றால் அது யார் அதிக வருமானம் வாங்குவது என்பதில்தான் இருக்கும். அந்த காலத்தில் இருந்தே இந்த பிரச்சனை இருந்து வந்தது. ஏனெனில் படத்தில் யார் அதிக சம்பளம் பெறுகிறார்களோ அவர்களே மார்கெட்டில் முதல் இடத்தில் இருப்பதாக கருதப்பட்டது.

இதனையடுத்து இந்த போட்டியில் நடிகைகளுமே இருந்தனர். தமிழ் சினிமாவில் முதன் முதலாக அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்றால் அது கே.பி சுந்தராம்பாள்தான். ஔவையார் திரைப்படத்திற்காக அவர் 1 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்து கொடுத்தார். ஆனால் நடிகர்களை பொறுத்தவரை முதலில் 1 லட்சம் சம்பளம் வாங்கியவர் நடிகர் சந்திரபாபுதான் என கூறப்படுகிறது.

ஏனெனில் சந்திரபாபு அவரே இயக்கி நடித்த ஒரு திரைப்படத்திற்கு இயக்குவதற்கும் நடிப்பதற்கும் சேர்த்து மொத்தமாக 1 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினார் என கூறப்படுகிறது.

ஆனால் சந்திரபாபுவிற்கு முன்பே வேறொரு காமெடி நடிகர் 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் நடித்து கொடுத்துள்ளார். அது வேறு யாரும் அல்ல. பழம் பெரும் காமெடி நடிகர் தங்க வேலுதான்.

தங்கவேலுவும் சந்திரபாபு அளவிற்கு தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்தான். அவர் பல திரைப்படங்களுக்கு அட்டக்காசமான அவரது காமெடிகளை வெளிப்படுத்தி இருப்பார். இந்த நிலையில் அப்போது பாக்யவதி என்கிற திரைப்படத்தில் நடிப்பது குறித்து கேட்பதற்காக தங்கவேலுவை பார்க்க வந்துள்ளனர்.

அப்போது அவர்களிடம் பேசிய தங்கவேலு நான் அச்சாணி என்கிற திரைப்படத்தில் 1 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினேன். நீங்கள் எவ்வளவு தருவீர்கள் என கூறுங்கள் என கூறியுள்ளார் தங்கவேலு. அப்போதுதான் தங்கவேலு ஏற்கனவே ஒரு லட்சரூபாய் சம்பளத்திற்கு நடிக்கும் விஷயமே தெரிந்துள்ளது.

To Top