Connect with us

ஒரு கேரக்டர கண்ணுலையே காட்டாமல் கெத்து ஏத்திட்டியேப்பா!.. அஜித் பட இயக்குனரை பார்த்து ஆடிப்போன ஆர்.பி சௌத்ரி..

ajith director ezhil

Cinema History

ஒரு கேரக்டர கண்ணுலையே காட்டாமல் கெத்து ஏத்திட்டியேப்பா!.. அஜித் பட இயக்குனரை பார்த்து ஆடிப்போன ஆர்.பி சௌத்ரி..

cinepettai.com cinepettai.com

Director ezhil: தமிழ் சினிமா இயக்குனர்களில் 90 காலங்களில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் உண்டு. அப்படியான இயக்குனர்கள் பலரையும் இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதற்கான வாய்ப்பு என்பது மிக மிக குறைவு. அப்படியிருக்கும்போது பழைய படங்கள் பல ஹிட் கொடுத்து இப்போதைய தலைமுறையினரிடமும் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் எழில்.

விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும், அஜித் நடிப்பில் பூவெல்லாம் உன் வாசம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் எழில். இப்போதைய தலைமுறையினருக்கும் அவரை தெரிய காரணமாக இருப்பது அவரது சினிமா பயணம்தான். இப்போதும் அவர் ஹிட் கொடுக்கும் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

பெரும்பாலும் இப்போது அவர் இயக்கும திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகவே இருக்கின்றன. அதில் தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற திரைப்படங்கள் பிரபலமானவை. தற்சமயம் தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் வேறு எடுத்துள்ளார் எழில்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தின் அனுபவம் குறித்து பேசப்பட்டது. அதில் பதிலளித்த எழில் கூறும்போது துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் ஒரு அம்மா கதாபாத்திரத்தை வைத்திருப்பேன். அந்த கதாபாத்திரம் படத்தில் எங்குமே வராது.

ஆனால் மொத்த படத்திலேயும் மிக முக்கியமான கதாபாத்திரம் அது. இந்த நிலையில் அந்த படத்தை திரையிடுவதற்கு முன்பு பார்த்த தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரி அந்த படத்தை பார்த்தார். அவருக்கு ஒரே அதிர்ச்சியாகி விட்டது. என்னதுயா அந்த அம்மா கதாபாத்திரத்தை காட்டவே இல்லை. அட்லீஸ்ட் ஒரு போட்டோவாவது காட்டலாம் இல்லையா என கேட்கவும் இல்லை சார் கதைக்கு அது தேவைப்படவில்லை என கூறியிருக்கிறார் எழில்.

அதே போல படம் வெளியான பிறகு மக்களுக்கும் கூட விஜய்யின் தாயை காட்டவே இல்லையே என்கிற கேள்வி வரவில்லை. ஆனால் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக அந்த தாய் கதாபாத்திரம் இருந்தது.

To Top