Cinema History
இதுதான் உங்களுக்கு கடைசி வார்னிங்!.. எம்.ஜி.ஆர் மேல கைய வைக்காதீங்க!.. கண்ணதாசனுக்கு எச்சரிக்கை கொடுத்த சோ!..
MGR and Kannadasan: இப்போது இருக்கும் திரை துறையை விடவும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் திரைத்துறை மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருந்தது. சொல்லப்போனால் திரைத்துறையும் அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த காலகட்டம்தான் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டம்.
அப்போது சினிமாவில் பிரபலமாக இருந்த பலரும் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். அது குறித்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அவர்கள் பேசியும் வந்தனர். அப்படியாக கவிஞர் கண்ணதாசன் திமுக கழகத்தின் தொண்டராக இருந்து வந்தார்.
அதே சமயம் பத்திரிகையாளர் சோ வை பொறுத்தவரை அவர் தி.மு.கவிற்கு எதிரான மனநிலையில் இருந்தார். அதேசமயம் எம்.ஜி.ஆருக்கு ஆதரவான மனநிலையில் இருந்தார். இந்த நிலையில் ஒருமுறை கலைஞர் மிகப்பெரிய ராஜதந்திரி என்று கண்ணதாசன் கூறிய பொழுது அதை ஒப்புக்கொள்ளவில்லை சோ.
அதற்குப் பிறகு சில மாதங்கள் கழித்து எம்.ஜி.ஆரை பொருளாளர் பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு முடிவு செய்து இருந்தார் கலைஞர். இந்த விஷயம் முன்பே கண்ணதாசனுக்கு தெரிந்து விட்டது.
இந்த நிலையில் சோவுக்கு போன் செய்த கண்ணதாசன் இந்த விவரத்தைக் கூறி இப்பொழுது சொல்லுங்கள் கலைஞர் ராஜதந்திரி என்று ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்ட பொழுது அதற்கு பதில் அளித்த சோ கூறும் பொழுது இப்படி ஒரு விஷயத்தை கலைஞர் செய்தார் என்றால் அவரை ராஜதந்திரி என்று யாரும் ஒப்புக்கொள்ள முடியாது.
ஏனெனில் எம்.ஜி.ஆருக்கு இருக்கும் மக்கள் கூட்டம் என்னவென்று உங்களுக்கு புரியவில்லை. திமுக என்கிற கட்சி இருந்தாலும் இல்லை என்றாலும் அது எம்.ஜி.ஆர் புகழை எப்படியும் பாதிக்கப் போவது கிடையாது. சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் ஒரு கட்சி துவங்கினார் என்றால் அது தி.மு.கவிற்கு மிக பெரும் எதிரான ஒரு கட்சியாக அமைந்துவிடும்.
மக்கள் கூட்டமும் அந்த கட்சியின் பக்கம்தான் போகும் எனவே அவரை கட்சியிலிருந்து நீக்குவது என்பது சரியான முடிவு கிடையாது என்று சோ கூறினார். சோ கூறியது போலவே எதிர்காலத்தில் எம்.ஜி.ஆரின் கட்சி மிகப்பெரிய கட்சியாக வளர்ந்து மக்கள் மத்தியில் பிரபலமானது.