Connect with us

ஏர்போர்ட்டில் வடிவேலுவை நேருக்கு நேர் சந்தித்த கேப்டன்!.. அந்த ஒரு வார்த்தையால் ஆடி போன வடிவேலு!..

vadivelu vijayakanth

Cinema History

ஏர்போர்ட்டில் வடிவேலுவை நேருக்கு நேர் சந்தித்த கேப்டன்!.. அந்த ஒரு வார்த்தையால் ஆடி போன வடிவேலு!..

cinepettai.com cinepettai.com

Captain Vijayakanth : தமிழ் சினிமா நடிகர்களில் எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றவராக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். சின்ன கிராமத்திலிருந்து கனவுகளோடு சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்த பல நடிகர்களில் கேப்டன் விஜயகாந்தும் முக்கியமானவர்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கேப்டன் விஜயகாந்த் சென்னைக்கு வந்த பொழுது உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடிக்கும் போது ஜூனியர் ஆர்டிஸ்டிகளுக்கு போடும் உணவுகள் சாப்பிடவே தகுதி இல்லாதவையாக இருந்தன.

vijayakanth-4
vijayakanth-4

அதனால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் தான் ஒரு கதாநாயகனாக மாறும் பொழுது அனைவருக்கும் நல்ல சாப்பாடு போட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து அவர் கதாநாயகன் ஆன பிறகு அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் ஊழியர்கள் அனைவருக்கும் அசைவ சாப்பாடு போட வேண்டும். அந்த உணவை தான் அவரும் உண்பார் என்கிற புது விதிமுறையை கொண்டு வந்தார்.

விஜயகாந்தின் இறப்புக்கு பெரும் கூட்டம் ஒன்று இருந்ததை அனைவரும் பார்த்திருப்பார்கள். இதற்கு முன்பு பெரும் கூட்டம் வந்த எம் ஜி ஆர் கருணாநிதி போன்ற தலைவர்கள் அரசியலுக்கு வந்து அரசு பணத்தில் மக்களுக்கு நன்மைகள் செய்து அந்த வெகுஜன கூட்டத்தை பெற்றனர். ஆனால் விஜயகாந்த் தன்னுடைய சொந்த பணத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்தே. அப்படியான ஒரு கூட்டத்தை பெற்றுள்ளனர்.

ஆனால் அவரை தமிழ் சினிமாவில் வெகுவாக விமர்சித்த ஒரே ஒரு நடிகர் என்றால் அது நடிகர் வடிவேலுதான். வடிவேலு அரசியலுக்கு வந்த பொழுது விஜயகாந்த்தை மிகவும் மோசமாக விமர்சித்தார். இருந்தாலும் அப்போதைய தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த்.

அதனை தொடர்ந்து விஜயகாந்தை பார்க்கவே வடிவேலு பயந்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் ஒரு நாள் விமான நிலையத்தில் எதேர்ச்சையாக விஜயகாந்த்தை சந்தித்து விட்டார் வடிவேல். அவரை நன்றாக இருக்கிறாயா என்று விசாரித்துவிட்டு சென்று இருக்கிறார் விஜயகாந்த். விஜயகாந்த் கேட்ட அந்த கேள்வி வடிவேலுவை மிகவும் பாதித்தது என்று கூறப்படுகிறது.

ஏனெனில் தான் மிகவும் மோசமாக பேசிய ஒரு மனிதர் தன் மேல் பகை கொள்ளாமல் இவ்வளவு சாதாரணமாக பார்த்துவிட்டு பேசிவிட்டு செல்கிறாரே என்பது வடிவேலுக்கே அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக இருந்துள்ளது.

POPULAR POSTS

ilayaraja
rajini lokesh kanagaraj
sundar c kushboo
deva
vijay rajinikanth
pugazh vengatesh bhatt
To Top