Connect with us

மூணு பட வாய்ப்புகளை அப்பாவால் இழந்தேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த வரலெட்சுமி சரத்குமார்!.

varalaxmi and sarathkumar

Latest News

மூணு பட வாய்ப்புகளை அப்பாவால் இழந்தேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த வரலெட்சுமி சரத்குமார்!.

Social Media Bar

போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலெட்சுமி சரத்குமார். வெகு காலங்களாகவே அவருக்கு சினிமாவில் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் சரத்குமார் அதற்கு அனுமதிக்காததால் தாமதமாகவே சினிமாவிற்கு வந்தார்.

அவர் நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படம்தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் முதல் படமாகும். ஆனால் அந்த படம் அந்த அளவிற்கு பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து வரலெட்சுமி 4 வருடங்கள் வரலெட்சுமி சரத்குமாருக்கு தமிழில் எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

பிறகு 2016 ஆம் ஆண்டு தாரை தப்பட்டை திரைப்படத்தில் சூறாவளி என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அதிகரிக்க துவங்கின. சர்கார், சண்டக்கோழி 2 மாதிரியான படங்களில் பெரிய ஹீரோக்களுக்கு வில்லியாகவும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் போடா போடி திரைப்படத்திற்கு முன்பே திரைத்துறையில் தனது மூன்று திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்ததாகவும் சரத்குமார் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறுகிறார் வரலெட்சுமி.

அதில் முதல் இடத்தில் இருக்கும் திரைப்படம் பாய்ஸ். பாய்ஸ் திரைப்படத்தில் வரலெட்சுமியை நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் இயக்குனர் ஷங்கரின் ஆசையாக இருந்தது. இதற்காக முக்கால்வாசி வேலைகள் முடிந்த நிலையில் சரத்குமார் ஒப்புக்கொள்ளாததால் பிறகு ஜெனிலியாவை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தனர்.

அதே போல காதல் திரைப்படத்திலும் சந்தியாவிற்கு பதிலாக வரலெட்சுமிதான் நடிக்க விருந்தாராம். சரோஜா திரைப்படத்தில் நடிப்பதற்கும் வெங்கட்பிரபு வரலெட்சுமியிடம்தான் கேட்டுள்ளார். ஆனால் இந்த படங்களில் எல்லாம் நடிப்பதற்கு சரத்குமார்தான் ஒப்புக்கொள்ளவில்லையாம். வரலெட்சுமி சரத்குமார் இதை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top