Connect with us

நைட்டு ரூமுக்கு கூப்பிட்டது பாலக்கிருஷ்ணாவா!.. பிக்பாஸில் வெளியிட்ட விசித்ரா!..

vichitra balakrishna

Bigg Boss Tamil

நைட்டு ரூமுக்கு கூப்பிட்டது பாலக்கிருஷ்ணாவா!.. பிக்பாஸில் வெளியிட்ட விசித்ரா!..

cinepettai.com cinepettai.com

Biggboss vichitra Balakrishna : பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடங்கியது முதலே அதில் ஒரு சிறப்பான போட்டியாளராக இருந்து வருகிறார் விசித்ரா. சில நேரங்களில் போட்டியாளர்களிடம் மோசமாக நடந்து கொண்டாலும் கூட விசித்ராவிற்கு இருக்கும் தைரியத்தின் காரணமாக அவருக்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் வாழ்க்கையில் அவர்களுக்கு நடந்த மோசமான விஷயங்களை போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்டனர். அதில் விசித்ரா பேசும் பொழுது மிக முக்கியமான ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார். ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பிற்காக சென்ற பொழுது ஹோட்டல் அறையிலேயே அங்கு தங்கியிருந்த படத்தின் கதாநாயகன் இரவு அவருடைய அறைக்கு விசித்ராவை அழைத்ததாக அவர் கூறினார்.

ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் படப்பிடிப்பு முழுவதுமே அந்த பட குழுவினர் அவருக்கு டார்ச்சர் கொடுத்துள்ளனர். இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு அவரது அறை கதவை தட்டி உள்ளனர். இந்த செய்தியை அறிந்த அந்த ஹோட்டல் நிர்வாகி விசித்ராவிற்கு உதவும் வகையில் தினமும் அவரை வெவ்வேறு அறையில் தங்க வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஒரு சண்டை காட்சி படம் பிடிக்கப்படும் பொழுது அங்கு விசித்ராவை தவறான இடங்களில் தொட்டுள்ளனர். இதனால் கடுப்பான விசித்திரா இது குறித்து இயக்குனரிடம் கூறும் பொழுது இயக்குனர் விசித்திராவை ஓங்கி அறைந்து படப்பிடிப்பை விட்டு அனுப்பி விட்டார். அங்கு இருந்த யாருமே அதற்கு எதிராக கேள்வி கேட்கவில்லை.

பிறகு அவர் இது குறித்து வழக்கு போட்டும் கூட அவருக்கு நீதி கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த விசித்திரா சினிமாவை விட்டு விலகி விட்டதாக அந்த நிகழ்வில் பேசியிருந்தார். இந்த நிலையில் யார் இந்த விஷயத்தை செய்திருப்பார் எந்த தெலுங்கு படத்தில் இது நடந்தது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் வர துவங்கியது.

இந்த நிலையில் அந்த திரைப்படம் பாலாவிதேவிபசு (Bhalevadivi Basu) என்கிற பாலகிருஷ்ணாவின் திரைப்படம் என்பது தெரிந்துள்ளது .அந்தப் படத்தின் ஃபைட் மாஸ்டர் ஏ விஜய்யின் மீதுதான் விசித்ரா வழக்கு தொடர்ந்திருக்கிறார். அன்று ஹோட்டலில் உண்மையில் விசித்திராவை தன் அறைக்கு அழைத்தது வேறு யாரும் இல்லை தெலுங்கு பிரபலமான நடிகர் பாலகிருஷ்ணாதான் என்பது இதன் மூலம் தெரிந்துள்ளது.

இவ்வளவு மோசமான சினிமா துறையாகவா தெலுங்கு சினிமா இருந்தது என கூறி வரும் ரசிகர்கள் நடிகர் பாலகிருஷ்ணாவையும் விமர்சித்து வருகின்றனர்.

To Top