Tamil Cinema News
அதை வேற பண்ணீட்டாய்ங்களா?. அட பாவிகளா… விக்ரமன் படத்தை பார்த்து அவரே அதிர்ச்சியான தருணம்.!
தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விக்ரமன். ஒரு காலக்கட்டத்தில் இயக்குனர் விக்ரமன் திரைப்படம் என்றாலே மெஹா ஹிட் வெற்றிகள்தான். பிறகு ஒரு கட்டத்திற்கு பிறகு விக்ரமன் இயக்கும் பாணியிலான திரைப்படங்களின் வரத்து குறைந்தது.
மேலும் சில தனிப்பட்ட காரணங்களால் அதிக பிரபலமாக இருந்த காலக்கட்டத்திலேயே விக்ரமன் தமிழ் சினிமாவில் இருந்து விலகிவிட்டார். பிறகு சில வருடங்கள் கழித்து அவர் திரைப்படங்கள் இயக்கினார். ஆனால் அவ்வளவாக அது வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவரிடம் பிரியமான தோழி திரைப்படத்தின் கன்னட ரீமேக் குறித்து பேசப்பட்டது. அந்த கன்னட ரீமேக்கில் வரும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் விக்ரமன்.
வி ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். மீரா ஜாஸ்மின் அவருக்கு தோழியாகவும், நமீதா ஜோடியாகவும் நடித்திருந்தார். அதில் ஜோதிகாவும் மாதவனும் முதன் முதலில் சந்திக்கும் அந்த காட்சியை மிக கவர்ச்சியாக நமீதாவை வைத்து எடுத்திருந்தனர்.
அதனை பார்த்துதான் விக்ரமன் அதிர்ச்சியானார். அந்த காட்சியை எவ்வளவு டீசண்டாக எடுத்திருந்தேன். இப்படி பண்ணி வச்சி இருக்காங்களே. வி ரவிச்சந்திரன் வேற எனக்கு நல்ல நண்பர். அவர் இப்ப நான் பேசுறதை பார்த்தால் போன் பண்ணி பேசுவார் என கூறினார் விக்ரமன்.
மேலும் அவர் கூறும்போது இப்படி என் படத்தை கன்னடத்தில் ரீமேக் பண்ணின விஷயமே எனக்கு தெரியாது. நல்ல வேளை என் பேர் இதுல வரலை என விக்ரமன் கூற உடனே தொகுப்பாளர் இல்ல சார் படத்தில் கதைனு போட்டு உங்க பேரைதான் போட்டு இருக்காங்க என கூறினார்.
அதனை கேட்ட விக்ரமன் அதையும் பண்ணிட்டாய்ங்களா. அட பாவிகளா என சிரித்துக்கொண்டே பேசியிருந்தார்.
