Connect with us

உன் படத்தால் நான் இரண்டு நாள் தூங்கலை… அமரனுக்கு முன்பே கமலை பாதித்த ஆர்மி திரைப்படம்.. இயக்குனர் யார் தெரியுமா?

Tamil Cinema News

உன் படத்தால் நான் இரண்டு நாள் தூங்கலை… அமரனுக்கு முன்பே கமலை பாதித்த ஆர்மி திரைப்படம்.. இயக்குனர் யார் தெரியுமா?

Social Media Bar

தமிழில் ஆரம்பம் பில்லா மாதிரியான திரைப்படங்கள் எடுத்து பிரபலம் அடைந்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். பெரும்பாலும் விஷ்ணுவர்தன் இயக்கும் திரைப்படங்களுக்கு இங்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது.

ஏனெனில் அவர் இயக்கிய நிறைய திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளது. தற்சமயம் கூட ஒரு காதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். இந்த நிலையில் முன்பு விஷ்ணுவர்தன் இயக்கிய திரைப்படத்திற்கு கமல்ஹாசன் கொடுத்த அங்கீகாரம் குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

விஷ்ணுவர்தன் திரைப்படம்:

அதில் அவர் கூறும் பொழுது செர்ஷா என்கிற ஒரு திரைப்படத்தை ஹிந்தியில் நான் இயக்கினேன். அந்த திரைப்படத்தை இயக்கும்போது அதில் தமிழ் சாயல் சுத்தமும் இருக்கக் கூடாது என்று நினைத்தேன். முக்கியமாக என்னுடைய பாணியில் எடுக்கப்பட்ட படமாக அது தெரியக்கூடாது என்று நினைத்தேன்.

எனவே நான் அந்த திரைப்படத்தை வேறு மாதிரி எடுத்திருந்தேன். ஒருநாள் கமல்ஹாசன் அந்த திரைப்படத்தை பார்த்தார். பார்த்துவிட்டு எனக்கு போன் செய்தார். போன் செய்துவிட்டு அந்த திரைப்படத்தை பார்த்து விட்டு இரண்டு நாட்கள் நான் தூங்கவில்லை.

அதில் இயக்குனர் விஷ்ணுவர்தன் என்று போட்டிருந்தது அது நமது விஷ்ணு வர்தனா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது பிறகு நான் மகேந்திரனிடம் இது குறித்து கேட்டேன் என்று கமல்ஹாசன் கூறினார். அது எனக்கு பெரிய அங்கீகாரமாக இருந்தது என்று கூறியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.

சேஷா என்கிற அந்த திரைப்படம் ராணுவ வீரர்கள் தொடர்பான ஒரு திரைப்படமாகும். ஒருவேளை அமரன் திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதற்கு அடிப்படை காரணமாக இந்த படம் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top