Connect with us

பஸ் காருக்கு எல்லாம் உயிர் வந்து மனிதர்களை கொன்னு குவிச்சா எப்படி இருக்கும்? –  அதிர வைக்கும் திரைப்படம் மேக்ஸிமம் ஓவர் ட்ரைவ்!

Hollywood Cinema news

பஸ் காருக்கு எல்லாம் உயிர் வந்து மனிதர்களை கொன்னு குவிச்சா எப்படி இருக்கும்? –  அதிர வைக்கும் திரைப்படம் மேக்ஸிமம் ஓவர் ட்ரைவ்!

cinepettai.com cinepettai.com

ஹாலிவுட் சினிமாக்களில் விசித்திரமான திரைப்படங்களுக்கு பஞ்சமே கிடையாது. தமிழ்நாட்டில் எழுத்தாளர் ராஜேஷ்குமார் போல ஆங்கிலத்தில் த்ரில்லர் நாவல் எழுதுவதற்கு என்றே பிரபலமாக உள்ள எழுத்தாளர்தான் ஸ்டீபன் கிங்.

ஸ்டீபன் கிங்கின் அதிகமான கதைகள் திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. இவர் எல்லாவிதமான கதைகளையும் எழுதுவார் என்றாலும் ஹாரர் கதைகளே இவரிடம் பிரபலமானவை. அப்படி அவர் எழுதி அவரே கதையாக்கிய திரைப்படம்தான் மேக்ஸிமம் ஓவர்ட்ரைவ்.

படத்தின் கதைப்படி அடையாளம் தெரியாத பச்சை நிற கதிர் ஒன்று பூமியை சூழ்ந்துக்கொள்கிறது. இந்த கதிர் ஏழு நாட்கள் பூமியை சுற்றி நீடிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கதிரின் பாதிப்பால் பூமியில் உள்ள அனைத்து மின்சாரத்தால் இயங்கும் பொருட்களுக்கும் உயிர் வந்துவிடுகிறது. ஏ.டி.எம் மெஷின், ஹேர் ட்ரையரில் துவங்கி ட்ரக் வண்டிகள், ஏரோப்ளேன் என அனைத்திற்கும் உயிர் வந்துவிடுகிறது.

உயிர் வந்ததும் முதல் வேலையாக இவை அனைத்தும் மனிதனை கொல்வதற்கான வேலையில் இறங்குகின்றன. இந்த நிலையில் பல ட்ரக் வண்டிகளுக்கு நடுவே ஒரு கூட்டம் பெட்ரோல் வங்கியில் உள்ள ஒரு கடையில் மாட்டிக்கொள்கிறது. இந்த வண்டிகளிடம் இருந்து மனிதர்கள் தப்பிப்பதே கதையாக உள்ளது.

படத்தில் குறை என பார்த்தால் மின்சாதனங்களுக்கு உயிர் வருவதில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ட்ரக் எல்லாம் உயிர் வந்து ஊருக்குள் சுற்றும்போது கார்களுக்கு மட்டும் உயிர் வரவில்லை. அந்த மாதிரி கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் சில மின்சார சாதனங்களுக்கு உயிர் வரவில்லை என்பது முரணான விஷயமாக இருந்தது.

அதை தவிர்த்து படம் ஒரு எண்டர்டெயின்மெண்ட் காம்போ ஆகும். 1986 இல் வந்தாலும் கூட இப்போதும் பார்ப்பவருக்கு ரசனையான படமாக மேக்ஸிமம் ஓவர்ட்ரைவ் இருக்கிறது.

To Top