பாலிவுட் நடிகரால் கிடைத்த வாய்ப்பை இழந்த நயன்தாரா… இவ்வளவு வன்மம் கூடாது…

தமிழ் ரசிகர்களால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சரத்குமார் நடித்த ஐயா திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து வாய்ப்புகளை பெற்ற நயன் தாரா தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக மாறினார். அதனை தொடர்ந்து பெண்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார் நயன்தாரா.

Nayanthara
Nayanthara
Social Media Bar

அவர் நடித்த இமைக்கா நொடிகள், அன்னப்பூரணி, ஒ2, அறம் மாதிரியான படங்கள் எல்லாம் கதாநாயகர்கள் இல்லாத படங்களாகவும் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களாகவும் இருந்தன.

இந்த நிலையில் தொடர்ந்து பாலிவுட்டிலும் ஜவான் மாதிரியான படங்களில் நடித்த நயன்தாரா தற்சமயம் தெலுங்கில் கண்ணப்பா என்கிற திரைப்படத்தில் நடிக்க இருந்தார். சிவனின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படம் பெரும் பட்ஜெட்டில் படமாக்கப்பட இருந்தது.

இந்த படத்தில் முதலில் நடிகர் பிரபாஸ்தான் கதாநாயகனாக நடிக்க இருந்தது. ஆனால் தற்சமயம் பிரபாஸ்க்கு பதிலாக அக்‌ஷய் குமார் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். அவர் கமிட் ஆனதும் நயன் தாராவை படத்தில் இருந்து தூக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இவருக்கு நயன் தாரா மீது இருந்த முன் பகையே இதற்கு காரணம் என இணையத்தில் பேச்சுக்கள் இருந்தாலும் இதற்கான சரியான காரணம் இன்னமும் தெரியவில்லை.