Cinema History
குஷ்பூ திருமணத்தில் கதறி அழுத கார்த்திக்.. இதுதான் காரணமாம்!..
80 களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை குஷ்பூ. வட இந்தியாவில் இருந்து வந்த குஷ்பூவிற்கு தமிழ் சினிமாவிற்கு வந்த உடனே பெரிதாக வரவேற்புகள் கிடைக்க துவங்கியது.
முக்கியமாக அவர் நடித்த திரைப்படங்களில் சின்னதம்பி திரைப்படம் அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அப்போதைய காலகட்டங்களில் இயக்குனர்களை திருமணம் செய்வது என்னும் முறையை நடிகைகள் பின்பற்றி வந்தனர்.
இயக்குனருடன் காதல்:
இயக்குனரை திருமணம் செய்து விட்டால் அதற்கு பிறகு நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பதே பெரிதாக இருக்காது. இந்த நிலையில் குஷ்பூவும் அந்த வகையில் முறைமாமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இயக்குனர் சுந்தர் சி யை காதலிக்க தொடங்கினார்.
இந்த காதல் வெகுநாட்கள் சென்ற பிறகு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார். அந்த சமயத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் குஷ்பூ இருவருமே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். குஷ்பு முதன்முதலில் சுந்தர்சியை காதலிக்கும் விஷயத்தை நடிகர் கார்த்தி இடம் தான் கூறினார்.
கதறி அழுத கார்த்திக்:
அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் நல்ல நட்பில் இருந்து வந்தனர் அதேபோல குஷ்பூ மற்றும் சுந்தர் சி திருமணத்திற்கும் முக்கிய விருந்தாளியாக கார்த்தி வந்திருந்தார்.
அப்பொழுது சுந்தர் சியும் குஷ்பூவும் கார்த்தியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்களாம். அப்பொழுது அதனால் அதிக எமோஷனலான கார்த்திக் கண்ணீர் விட்டு அழுதாராம் இந்த நிகழ்வை குஷ்பூ ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.