தொடர்ந்து வரும் அரசியல் தொல்லைகள்!.. காலையிலேயே காண்டான விஷால்!..

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஷால் நடித்து வரும் திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். ஏற்கனவே ஹரி விஷாலை வைத்து தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஹரி, விஷால் காம்போவை பொறுத்தவரை அது ஒரு வெற்றி காம்போவாகவே இருந்து வருகிறது. இன்று ரத்னம் திரைப்படம் திரையில் வெளியான நிலையில் சில பிரச்சனைகளை ரத்னம் திரைப்படம் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரத்னம் திரைப்படத்திற்காக பேட்டி கொடுத்தப்போது ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தோடு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதுதான் தற்சமயம் அவரது படத்திற்கு குறைவான திரையரங்கம் கிடைக்க காரணம் என ஒரு பக்கம் பேச்சு உள்ளது.

ratnam
ratnam
Social Media Bar

மறுப்பக்கம் கில்லி திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதில் திரையரங்குகளுக்கு உரிமை தொகையும் அதிகமாக இருப்பதால அவர்கள் விஷால் படத்தை வெளியிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடுப்பான விஷால் காலையிலேயே சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் எந்த பயமும் இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து சென்று கொண்டுள்ளது. இந்த வருடம் ராட்டினத்தில் சுற்றுவது போல்தான் தயாரிப்பாளர்களின் நிலை உள்ளது. என்னை போன்ற போராளியை உங்களால் சாய்க்க முடியாது. தாமதமாக கிடைத்தாலும் நீதி கிடைத்தே தீரும்.

இங்கு யாரும் பொழுதுப்போக்குக்காக படம் தயாரிக்க வரவில்லை. அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது. அது வாழ்வதற்கு படம் ஓட வேண்டும் என கூறியுள்ளார் விஷால்.

இந்த பதிவு தற்சமயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.