Connect with us

ஜெய்ராம் அந்த ஒரு வார்த்தையை தப்பா சொன்னதுக்காக வச்சி செஞ்ச கவுண்டமணி… இப்பயும் அந்த காமெடியை பார்த்தா தெரியும்!..

gaundamani jairam

Cinema History

ஜெய்ராம் அந்த ஒரு வார்த்தையை தப்பா சொன்னதுக்காக வச்சி செஞ்ச கவுண்டமணி… இப்பயும் அந்த காமெடியை பார்த்தா தெரியும்!..

cinepettai.com cinepettai.com

Gaundamani jairam: திரையில் மட்டும் காமெடி செய்யாமல் நிஜ வாழ்க்கையிலும் நிறைய கவுண்டர் அடிப்பதால்தான் கவுண்டமணி என்கிற பெயர் அவருக்கு வந்தது. அவருக்கு தெரிந்த நெருங்கிய நண்பர்கள் மணி அண்ணன் என்று தான் அவரை அழைப்பார்கள்.

கமல்ஹாசன் ரஜினிகாந்த்தில் துவங்கி அவருக்கு யாரையெல்லாம் கேலியாக தோன்றுகிறதோ அவர்களை எல்லாம் கேலியாக பேசக்கூடியவர் கவுண்டமணி. அதுவே அவரது வாழ்க்கையில் சில பிரச்சனைகளையும் கொடுத்துள்ளது.

பல படங்களின் வாய்ப்புகள் அவருக்கு போவதற்கு காரணமாகவும் இருந்துள்ளது. இப்போதும் லால் சலாம் திரைப்படத்தில் செந்திலுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது கவுண்டமணிக்கு மட்டும் ஏன் எந்த திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என பார்க்கும் பொழுது அதற்கு இந்த பிரச்சனைகளே காரணமாக இருக்கும் எனலாம்.

இப்படி நடிகர் ஜெயராமிடமும் ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார் கவுண்டமணி. முறைமாமன் என்கிற திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கினார். அந்த திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கவுண்டமணி இருவரும் சேர்ந்து நடித்தனர்.

ஜெயராமிற்கு பெரிதாக தமிழ் தெரியாது என்பதால் படத்தின் வசனம் எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ அதை அப்படியேதான் பேசுவார். அதில் ஒரு காட்சியில் கவுண்டமணியும் ஜெயராமும்  பேய் வேடத்தில் வரும் பொழுது கவுண்டமணியை நாய் துரத்துவது போன்ற காட்சி ஒன்று இருக்கும்.

அந்த காட்சியில் அண்ணா என்று கூப்பிட வேண்டிய இடத்தில் அந்த வசனத்தை அப்படியே படித்த ஜெயராம் அண்ணன் என்று கூறினார். அதை பார்த்து சிரித்த கவுண்டமணி பிறகு டப்பிங் பேசும் பொழுது அந்த நாய் துரத்தும் பொழுது நாயிடம் அண்ணன் அண்ணன் என்று திரும்பத் திரும்பக் கூறி ஜெயராமின் உச்சரிப்பை கேள்வி கேலி செய்திருந்தார் இந்த விஷயத்தை சுந்தர் சி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

POPULAR POSTS

aadukalam naren mysskin
annamalai vishal
mankatha
top cook dupe cook
vijay sun tv
ajith fans
To Top