Cinema History
மாதவனுக்கும் அவர் மனைவிக்கும் இடையே என்ன ஆச்சு தெரியுமா?.. சீக்ரெட்டை வெளியிட்ட இயக்குனர்…
Madhavan and Lingusamy :நடிகர் மாதவன் 90களின் சாக்லேட் பாய், பல பெண் ரசிகைகளின் கனவுக்கண்ணன். தமிழ் மட்டுமல்ல பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஒரு நடிகர் இன்றும் அவரது ஆரம்ப கால திரைப்படங்களுக்கு ரசிகர் கூட்டம் உள்ளது.
மாதவன் நடித்த “ரன்” திரைப்படம் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்திற்காக லிங்குசாமி மாதவனுக்கு போன் கால் செய்து கதை கூற ஆரம்பித்த போது எவ்வளவு நேரம் எடுக்கும் என்று மாதவன் கேட்டார் அதற்கு குறைந்தது 2 மணி நேரம் ஆகும் என்று லிங்குசாமி கூற எனக்கு தற்போது நேரம் இல்லை மீண்டும் அழைக்கிறேன் என்று போனை கட் செய்துவிட்டார்.
அதையும் பொறுத்துக்கொண்ட இயக்குனர் லிங்குசாமி மீண்டும் இரண்டாவது முயற்சிக்காக போன்கால் செய்து கேட்ட போது ஒரு மணி நேரத்திற்குள் கதையை கூற முடியும் என்றால் சந்திப்போம் என்று மாதவன் கூறியிருக்கிறார்.
ஒரு சில நாட்களில் மாதவன் இல்லத்திற்கு லிங்குசாமி சென்றுள்ளார். அந்த நேரத்தில் மாதவனும் அவரது மனைவியும் ஒரு நிகழ்விற்காக வெளியே செல்ல ஆயத்தமாகியிருந்தார்கள்.
அந்த நேரத்தில் லிங்குசாமி செல்ல மாதவன் தனது மனைவியிடம் ஒரு மணி நேரம் கொடு கதையை கேட்டுவிட்டு வருகிறேன் என்று கதை கேட்க ஆரம்பித்துள்ளார்.
நேரம் ஒரு மணி நேரத்தை கடந்தது, கதையும் இடைவேளையை கடந்தது மாதவன் கதையை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருக்க கதவு தட்டும் சத்தம் அவரது மனைவி நிகழ்விற்கு செல்ல வேண்டும் என்று கேட்க மாதவனோ கதையை கேட்கும் ஆர்வத்தில் திட்டித்தீர்த்துவிட்டு நீ முன்னால் செல் நான் வருகிறேன் என்று கூறி கதவை மூடி அனுப்பிவிட்டார்.
அதே ஆர்வத்தில் அந்த படத்தில் நடிக்க படம் மெகாஹிட் ஆனது. “ரன்” படம் மாதவன் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.