Connect with us

அந்த விஷயத்துலயே ஏழு விதம் இருக்கு சார்!.. விஜய் படத்தில் வந்து காணாமல் போன நடிகர்!.. அவ்வளவு திறமையா இவருக்கு!..

vijay pari vengat

Cinema History

அந்த விஷயத்துலயே ஏழு விதம் இருக்கு சார்!.. விஜய் படத்தில் வந்து காணாமல் போன நடிகர்!.. அவ்வளவு திறமையா இவருக்கு!..

cinepettai.com cinepettai.com

Thalapathy vijay: தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். இப்போது அவர் பெரும் உச்சத்தை தொட்டிருந்தாலும் கூட ஆரம்பத்தில் இவருக்கு தமிழில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

முதல் படத்தில் நடித்தப்போது உருவம் ரீதியாக அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார் விஜய். அவர் பார்ப்பதற்கு ஒரு கதாநாயகன் போலவே இல்லை என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில்தான் அவருக்கு விஜயகாந்த் உதவினார்.

செந்தூர பாண்டி திரைப்படத்தில் விஜயகாந்திற்கு தம்பியாக நடித்தார் விஜய். ஆனால் அதற்கு பிறகும் விஜய்க்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் விஜய்யின் வாழ்க்கையை காதல் திரைப்படங்கள் திருப்பி போட்டன.

பூவே உனக்காக திரைப்படத்தில் காதல் நாயகனாக நடிக்க துவங்கியதும் அவருக்கான வரவேற்பு அதிகரித்தது. அதனை தொடர்ந்து அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்த அடுத்த படம் துள்ளாத மனமும் துள்ளும். இப்போதும் கூட அந்த படத்தை தொலைக்காட்சியில் போடும்போது பார்ப்பதற்கு மக்கள் ஆவல் காட்டுகின்றனர்.

காமெடி, செண்டிமெண்ட், காதல் என அனைத்தையும் மிக சரியாக அந்த படத்தில் பொறுத்தி இருப்பார் இயக்குனர் எழில். அதில் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமானது ட்ரவுசர் பாண்டி காமெடிகள். ட்ரவுசர் பாண்டி என்னும் ஒரு கதாபாத்திரம் அந்த ஏரியாவில் செய்யும் அட்ராசிட்டிகளே படத்தில் காமெடியாக இருக்கும்.

பாரி வெங்கட் என்னும் நடிகர்தான் அந்த படத்தில் ட்ரவுசர் பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் அவர் ஒருவருக்கு வழி சொல்லும் காட்சி மிக பிரபலமானது. அந்த காட்சி குறித்து இயக்குனர் எழில் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

அதில் அவர் கூறும்போது வழி சொல்லும் அந்த காட்சி தொடர்பாக நாங்கள் பாரி வெங்கட்டிடம் கூறியப்போது அவர் எங்களிடம் வட சென்னை மக்கள் வழி சொல்லுவதிலேயே 7 விதம் இருக்கு சார் எனக்கூறி அந்த ஏழு விதங்களிலும் அதை நடித்தும் காட்டியுள்ளார். அதில் எழிலுக்கு ஒரு வகை பிடித்துப்போகவே அது படத்தில் வைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த காட்சிக்கான மொத்த பெருமையும் நடிகர் பாரி வெங்கட்டிற்குதான் செல்ல வேண்டும் என கூறியிருந்தார்.

அவ்வளவு திறமைகள் இருந்தும் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

To Top