Connect with us

கதாநாயகியை எங்க காணோம்? – ஷூட்டிங்கில் பார்த்திபன் செய்த சம்பவம்

Cinema History

கதாநாயகியை எங்க காணோம்? – ஷூட்டிங்கில் பார்த்திபன் செய்த சம்பவம்

Social Media Bar

நமது சினிமாக்களில் பல இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் எல்லாம் படத்தில் ஹீரோக்கள் செய்யும் சம்பவங்களை நிஜத்தில் அசால்ட்டாக செய்துள்ளனர். அப்படியாக நடிகரும் இயக்குனருமான பார்த்திபனும் கூட ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு மனோபாலா இயக்கிய திரைப்படம் மல்லுவேட்டி மைனர். இந்த படத்தில் கதாநாயகனாக சத்யராஜ் நடித்து வந்தார். கதாநாயகியாக சீதா நடித்தார். படத்தின் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருந்தது.

படத்தின் பாதி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் ஒரு நாள் திடீரென படத்தின் கதாநாயகி சீதா படப்பிடிப்பிற்கு வரவில்லை. வெகு நேரம் காத்திருந்தும் கூட அவர் வருமாறு தெரியவில்லை.

எனவே இதுக்குறித்து அவரது வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது சீதாவின் குடும்பத்தினரும் சீதா எங்கு சென்றுள்ளார் என்று தெரியவில்லை என கூறிவிட்டனர். அப்போது சீதாவும் இயக்குனர் பார்த்திபனும் காதலித்து வந்தனர்.

பிறகுதான் தெரிந்தது இருவரும் ஓடி போய் திருமணம் செய்துக்கொண்டனர் என்பது, ஓடி போய் திருமணம் செய்ததால் சீதாவின் குடும்பத்தார் பிரச்சனை செய்யக்கூடும் என அவரை படப்பிடிப்பிற்கு அனுப்ப மறுத்துவிட்டார் பார்த்திபன். ஆனால் ஏற்கனவே பாதி படம் எடுக்கப்பட்டு விட்டதால் இப்போது கதாநாயகியையும் மாற்ற முடியாது அல்லவா?

எனவே அங்கு சென்ற படத்தின் தயாரிப்பாளர் பார்த்திபன் மற்றும் சீதாவிடம் நிலைமையை எடுத்துக்கூறி சீதாவிற்கு எந்த பாதிப்பும் வராது என பொறுப்பு ஏற்றுக்கொண்டு அந்த படத்தை எடுத்து முடித்துள்ளார்.

Bigg Boss Update

To Top