Latest News
ஜெயிலர் அவ்வளவு சிறப்பான படமெல்லாம் கிடையாது.. ரஜினியே ஒத்துக்கிட்டார்..
தமிழில் ஹிட் படங்களாக கொடுக்கும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். அண்ணாத்த திரைப்படம் ஒழுங்காக ஓடாததை அடுத்து ரஜினி அடுத்து நடிக்கவிருந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது.
அதன்படியே அடுத்து வந்த ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான வெற்றியை கொடுத்தது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிரூத் ஆகியோருக்கு பரிசுகளை வழங்கியது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
இதற்கிடையே ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி விழா நடத்தப்பட்டது. அதில் பேசிய ரஜினி கூறும்போது படத்திற்கு மிகுந்த பலமாக இருந்தது அதன் இசைதான் அதற்கு அனிரூத்திற்குதான் நன்றி சொல்ல வேண்டும். இசையை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஒரு ஆவரெஜான படம்தான் ஜெயிலர் என பேசியிருந்தார்.
இத்தனை வருட தமிழ் சினிமாவில் இதை விட சிறப்பான படங்களை கொடுத்தவர் ரஜினி. எனவே அவருக்கு இது ஆவரெஜான படமாக தெரிவதில் ஆச்சரியமில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.