Connect with us

இது மறக்குமா நெஞ்சம் பார்ட் 2? ஹரிஹரன் கான்செர்ட்டுக்குள் நுழைந்த ரசிகர்களுக்கு பலத்த அடி, அடப்பாவமே

News

இது மறக்குமா நெஞ்சம் பார்ட் 2? ஹரிஹரன் கான்செர்ட்டுக்குள் நுழைந்த ரசிகர்களுக்கு பலத்த அடி, அடப்பாவமே

Social Media Bar

கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” கான்செர்ட்டை யாராலும் மறந்திருக்க முடியாது. நிர்வாகத்தின் குறைபாடு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்டிற்கு அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் எடுத்து வந்திருந்தவர்கள் கூட மன உளைச்சலுடன் வீடு திரும்பினார்கள்.

சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரஹ்மானை ரசிகர்கள் பலரும் மிகக் கடுமையாக விமர்சித்தனர். அதன் பின் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ரசிகர்களிடம் குறைபாடுகளை காரணம் காட்டி மன்னிப்பும் கேட்ட செய்தியை நாம் பார்த்திருப்போம்.

இதனை தொடர்ந்து தற்போது பிரபல பாடகரான ஹரிஹரனின் கான்செர்ட் பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. அதாவது நேற்று இரவு இலங்கையின் ஜாஃப்னா பகுதியில் உள்ள முட்டவேலி அரங்கத்தில் ஹரிஹரனின் கான்செர்ட் நடைபெற்றது.

இதில் ரம்பா, தமன்னா, யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மிர்ச்சி சிவா, சாண்டி மாஸ்டர், கலா மாஸ்டர் போன்ற சினிமா பிரபலங்களுடன் KPY பாலா, குக் வித் கோமாளி புகழ், மைனா போன்ற பல சின்னத்திரை நட்சத்திரங்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதனால் அந்த அரங்கமே விழாக்கோலம் போல் காட்சித் தந்தது.

கான்செர்ட் தொடங்கியபோது ரசிகர்கள் பலரும் அரங்கத்திற்குள் கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கினர். இதில் பாதுகாப்பையும் மீறி அதிக அளவில் ரசிகர்கள் கூட்டம் குவிந்ததால் அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.

ஹரிஹரன் லைவ் இன் கான்செர்ட் மற்றும் ஸ்டார் நைட் என்று பெயரிடப்பட்ட இந்த கான்செர்ட்டிற்கு இருபத்தி ஐந்தாயிரம், ஏழாயிரம், மூவாயிரம் போன்ற வெவ்வேறு கட்டணங்களை நிர்ணயித்திருந்தனர். அதே போல் Free Entryயும் இருந்திருக்கிறது.

இந்த நிலையில் கான்செர்ட்டிற்கு அதிகளவில் கூடிய ரசிகர்கள் பேரிகார்டுகளையும் மீறி கூட்டம் கூட்டமாக உள்ளே நுழைந்திருக்கின்றனர். ஆதலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.

ரசிகர்களிடையே கூட்ட நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார்கள் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் இலங்கை ஜாஃப்னாவில் மிகவும் பரபரப்பான சம்பவமாக ஆகிப்போனது. ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” கான்செர்ட்டிற்கு அடுத்தபடியாக ஹரிஹரனின் கான்செர்ட் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

Articles

parle g
madampatty rangaraj
To Top