அவன் எனக்கு பண்ணுனதை 100 பெண்களுக்கு பண்ணியிருக்கான்.. கணவன் குறித்து பேசிய ஸ்ருத்திகா..

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்தவர் நடிகை ஸ்ருதிஹா. தேங்காய் சீனிவாசனின் பேத்தியான ஸ்ருதிஹா தமிழில் தித்திக்குதே மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

ஆனால் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு ஸ்ருதிஹாவிற்கு கிடைத்தது.

உண்மையை கூறிய ஸ்ருத்திகா:

அதன் மூலமாக அவர் மீண்டும் வரவேற்பை பெற துவங்கினார் இந்த நிலையில் தற்சமயம் ஹிந்தியில் வெளியாகி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார் ஸ்ருதிஹா. சமீபத்தில் அவர் தனது கணவர் குறித்து நிறைய விஷயங்களை பேட்டியில் கூறியிருந்தார்.

shruthika
shruthika
Social Media Bar

அதில் அவர் கூறியிருந்த சில விஷயங்கள் வியப்புக்குரியதாக இருந்தது அதாவது ஒரு ரசிகராக ஸ்ருதிகாவிற்கு முகநூலில் மெசேஜ் அனுப்பி தான் முதன் முதலில் அவரை காதலிக்க துவங்கியிருக்கிறார் அவரது கணவரான அர்ஜுன்.

அந்த காதல் வளர்ந்து பிறகு திருமணமும் செய்து கொண்டனர் இதை பேட்டியில் கூறிய சுருதிஹா கூறும் பொழுது என்னை மாதிரியே 100 பெண்களுக்கு அவன் மெசேஜ் அனுப்பி இருக்கிறான். ஆனால் திருமணம் ஆன பிறகு அவன் யாருக்கும் மெசேஜ் அனுப்பவில்லை நானும் அவனை அனுப்ப விட்டது இல்லை என்று கூறியிருக்கிறார் ஸ்ருதிஹா.