Tamil Cinema News
வடிவேலு மாமன்னன் படத்தில் நடிச்சது பிடிக்கலை.! ஓப்பனாக கூறிய சுந்தர் சி..!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி இயக்குனர்களில் சுந்தர் சி முக்கியமானவர். சுந்தர் சியின் முதல் படமான முறைமாமன் திரைப்படத்தில் துவங்கி அவரின் பெரும்பாலான திரைப்படங்கள் காமெடி திரைப்படங்களாகதான் அமைந்துள்ளன.
சுந்தர் சி காலக்கட்டத்தில் இயக்குனராக இருந்த பலருக்கும் இப்போது சினிமாவில் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லை. அப்படி இருந்தும் கூட சுந்தர் சிக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்க காரணம் அவரை மாதிரியான காமெடி படங்களை இயக்கும் இயக்குனர்கள் இங்கு குறைவாகவே இருக்கின்றனர்.
இந்த நிலையில் வடிவேலுவும் சுந்தர் சியும் இணைந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். தலைநகரம், நகரம் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் அவர்களது காமெடி சிறப்பாக இருக்கும். இப்போதும் அவை யாவும் பிரபலமாகவே இருக்கின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் கேங்கர்ஸ் திரைப்படம் குறித்து ஒரு பேட்டியில் பேசும்போது சுந்தர் சி வடிவேலு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடிப்பது பிடிக்கவில்லை என கூறியிருந்தார். அவர் கூறும்போது தமிழ் சினிமாவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடிக்க நிறைய நடிகர்கள் இருக்கின்றனர்.
வடிவேலு நடிக்கவில்லை என்றாலும் கூட அவர்கள் நடிப்பார்கள். ஆனால் வடிவேலு மாதிரியான காமெடி நடிகர்கள் வேறு யாரும் கிடையாது. மற்றவர்களை சிரிக்க வைக்கவே வடிவேலு படைக்கப்பட்டுள்ளார். அவர் அதைதான் செய்ய வேண்டும் என கூறியுள்ளார் சுந்தர் சி.
