Connect with us

சுந்தர் சியை மதிக்காத தனியார் பள்ளி.. சுந்தர் சி சொன்ன அந்த பதில்.. மானத்தை காப்பாற்றிய திரைப்படம்..!

sundar c 3

Tamil Cinema News

சுந்தர் சியை மதிக்காத தனியார் பள்ளி.. சுந்தர் சி சொன்ன அந்த பதில்.. மானத்தை காப்பாற்றிய திரைப்படம்..!

Social Media Bar

இயக்குனர் சுந்தர் சி தமிழில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஆவார். பெரும்பாலும் ஒரு காலகட்டத்தில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்கள் எல்லாம் இப்பொழுது வெற்றி படங்களை கொடுப்பதற்கு தடுமாறி வருகின்றனர்.

இயக்குனர் மணிரத்தினம் கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு முன்பு தொடர்ந்து நிறைய தோல்வி படங்களை கொடுத்து வந்தார். ஆனால் சுந்தர் சியை பொறுத்தவரை எப்பொழுதும் அவர் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.

அவர் இயக்கி வரும் கலகலப்பு அரண்மனை மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே எப்பொழுதும் நல்ல வெற்றியை பெற்று வருகின்றன. இதற்கு முன்பு கமல் ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களை வைத்தும் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி.

சுந்தர் சி நிறைய திரைப்படங்களை இயக்கினாலும் அதில் இரண்டு திரைப்படங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. அதில் ஒன்று அருணாச்சலம் மற்றொன்று கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம்.

sundar c

sundar c

இயக்குனர் சுந்தர் சி:

அன்பே சிவம் சிவம் திரைப்படத்தை பார்க்கும் யாருமே அந்த திரைப்படத்தை சுந்தர் சி தான் இயக்கினார் என்று கூறினால் நம்ப மாட்டார்கள். ஏனெனில் எப்போதுமே காமெடி திரைப்படமாக இயக்கக் கூடியவர் சுந்தர் சி.

அவர் இப்படி ஒரு திரைப்படத்தை இயக்கினார் என்பது பலருக்குமே அதிர்ச்சியான ஒரு விஷயம் தான். ஆனால் அன்பே சிவம் திரைப்படம் வெளியான காலத்தில் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் அப்போதைய சமயத்தில் சுந்தர்சிக்கு அட்வைஸ் செய்த கமல் நாம் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்திருக்கிறோம்.

anbe sivam

anbe sivam

அது நமக்கு நல்லதைதான் செய்யும் என்று கூறியிருக்கிறார். அதேபோல பிறகு சுந்தர் சி தன்னுடைய குழந்தையை ஒரு பெரிய பள்ளியில் சேர்ப்பதற்கு சென்றிருக்கிறார். அந்த பள்ளியை பொருத்தவரை அட்மிஷன் போடுவது என்றால் பள்ளி திறப்பதற்கு சில மாதங்கள் முன்பே போட வேண்டும்.

பள்ளியில் நடந்த நிகழ்வு:

அப்பொழுதுதான் சீட்டு கிடைக்கும் ஆனால் பள்ளி துவங்குவதற்கு 20 நாட்கள் முன்பு சுந்தர்சி குஷ்புவுடன் சென்று இருந்தார். இதனால் சீட் இல்லை என்று கூறிய பள்ளி நிர்வாகம் இருந்தாலும் இவர்கள் விஐபி என்பதால் பேசிவிட்டு அனுப்பலாம் என்று பிரின்சிபல் அறையில் அமர வைத்தனர்.

அப்பொழுது வந்த பிரின்சிபல் சினிமா தொடர்பாக ஏதாவது பேச வேண்டுமே என்று கூறி சமீபத்தில் அன்பே சிவம் என்று ஒரு படம் வந்தது சிறப்பான ஒரு திரைப்படம் என்று பாராட்டி பேசிக்கொண்டிருந்தார் அதனைக் கேட்ட குஷ்பூ அந்த படத்தை இயக்கியவர் இவர்தான் என்று சுந்தர்சியை கைகாட்டி இருக்கிறார்.

அதனை அறிந்த அந்த தலைமை ஆசிரியர் உடனே அந்த படத்தை இயக்கிய உங்களுக்கு நான் சீட்டு தர முடியாது என்று எப்படி கூற முடியும் என்று கூறி உடனே அட்மிஷன் போட்டு கொடுத்து இருக்கிறார் இந்த விவரத்தை சுந்தர் சி  ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

To Top