Connect with us

நிஜமாவே விபத்து நடந்துடுச்சுன்னு ட்ரெயினையே நிறுத்திட்டாங்க!.. இயக்குனர் ஷங்கரை மிஞ்சும் அளவில் சுந்தர் சி போட்ட செட்!..

sundar c shankar

Cinema History

நிஜமாவே விபத்து நடந்துடுச்சுன்னு ட்ரெயினையே நிறுத்திட்டாங்க!.. இயக்குனர் ஷங்கரை மிஞ்சும் அளவில் சுந்தர் சி போட்ட செட்!..

cinepettai.com cinepettai.com

தமிழில் ஒவ்வொரு வகை திரைப்படங்கள் இயக்குவதில் ஒவ்வொரு இயக்குனர்கள் பிரபலமானவர்களாக இருப்பார்கள். அப்படியாக காமெடி திரைப்படங்களுக்கு பிரபலமானவர் இயக்குனர் சுந்தர் சி.

ஆனால் அவர் இயக்கிய ஒரு திரைப்படம் பெரிதாக காமெடி திரைப்படமாக இல்லாவிட்டாலும் கூட இப்போது வரை கொண்டாடப்படும் திரைப்படமாக இருக்கிறது. அதுதான் அன்பே சிவம் திரைப்படம். அன்பே சிவம் திரைப்படத்தில் மாதவன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் அதில் வரும் ரயில் விபத்து காட்சியை படமாக்கியது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் சுந்தர் சி. அதில் அவர் கூறும்போது ” அந்த காட்சியை மிகவும் கஷ்டப்பட்டுதான் எடுத்தோம். முதலில் மூன்று ரயில் பெட்டிகளுக்கு செட் போட்டுவிட்டோம். அதற்கு பிறகு இரண்டு நிஜ ரயில்களை நிறுத்தில் அதற்கு நடுவே மூன்று பெட்டி விபத்துக்குள்ளானது போல செட் செய்தோம்.

இவை அனைத்தையும் படம் பிடிக்க 80 உயரத்துக்கு க்ரேனை வைத்து படப்பிடிப்பை துவங்கினோம். ஆனால் மழை பெய்ய வைப்பதில் அப்போது சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே தரையில் தண்ணீரை ஊற்றி மழை பெய்தது போல மாற்றிவிட்டோம்.

அதன் பிறகு கிராபிக்ஸ் முறை மூலம் அப்போதே மழை பெய்வது போன்று அந்த காட்சியில் வரவழைத்தோம். இதற்கு நடுவே அந்த பகுதியை கடக்கும் ரயில்கள் வேறு ஏதோ நிஜமாகவே விபத்து நடந்துவிட்டது என ரயிலை நிறுத்தி வந்து பார்த்துக்கொண்டிருந்தனர் என்கிறார் சுந்தர் சி.

POPULAR POSTS

ilayaraja
rajini lokesh kanagaraj
sundar c kushboo
deva
vijay rajinikanth
pugazh vengatesh bhatt
To Top