Connect with us

அந்த சீனை எடுக்க நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும் – சுந்தர் சியை பாடாய் படுத்திய கார்த்தி!..

Cinema History

அந்த சீனை எடுக்க நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும் – சுந்தர் சியை பாடாய் படுத்திய கார்த்தி!..

Social Media Bar

தமிழில் நகைச்சுவை திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி இயக்கிய திரைப்படங்களில் நடிகர் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய நகைச்சுவை திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை.

ஆனால் கார்த்தியை வைத்து படம் எடுக்கும்போது மட்டும் மிகவும் கடினம் என கூறுகிறார் சுந்தர் சி. ஏனெனில் நகைச்சுவை காட்சிகளை படமாக்கும்போது கார்த்திக்கு உடனே சிரிப்பு வந்துவிடுமாம். இதனால் ஒரே காட்சியை பலமுறை படமாக்க வேண்டிய பிரச்சனை ஏற்பட்டது.

அதிலும் உள்ளத்தை அள்ளித்தா படத்தை எடுக்கும்போது ஒரு காட்சியில் பலமுறை கார்த்தி திரும்ப திரும்ப சிரித்துள்ளார். இதனால் கடுப்பான சுந்தர் சி அவரது கண்ணில் க்ளிசரினை ஊற்றிவிட்டு விட்டார். இதனால் கண் எரிச்சலாக இருந்ததால் அந்த காட்சியில் சிரிக்காமல் இருந்துள்ளார் கார்த்திக்.

To Top