Connect with us

கேப்டன் குடும்பத்துக்கு போன் செய்த விஜய்… இன்னமும் பழசை மறக்கல.!

Tamil Cinema News

கேப்டன் குடும்பத்துக்கு போன் செய்த விஜய்… இன்னமும் பழசை மறக்கல.!

Social Media Bar

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் விஜயகாந்த் சினிமாவில் அறிமுகம் ஆன அதே சமயத்தில்தான் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரும் இயக்குனராக அறிமுகமானார்.

அந்த சமயத்தில் விஜயகாந்தை வைத்து சந்திரசேகர் இயக்கிய படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. அதனால் இவர்கள் இருவரும் இணைந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்தனர். மேலும் எஸ்.ஏ சந்திரசேகருக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார் விஜயகாந்த்.

விஜய் ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்தப்போது அவர் நடித்த திரைப்படங்களை யாருமே பார்க்கவில்லை. இதனால் அவரை பிரபலப்படுத்துவதற்காக அப்போது பிரபலமாக இருக்கும் பெரிய நடிகருடன் நடிக்க வைக்கலாம் என நினைத்தார் எஸ்.ஏ சந்திரசேகர்.

vijayakanth

vijayakanth

அந்த சமயத்தில் நடிகர் விஜயகாந்த் தான் உதவினார். ஆனால் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் இன்னமும் சினிமாவில் கால் ஊன்றுவதற்காக போராடி வருகிறார். ஆனால் விஜய் அவருக்கு உதவவே இல்லை. இந்த நிலையில் பலரும் விஜய்யை விமர்சித்து வந்தனர்.

ஆனால் உண்மையில் விஜய் எப்போதும் விஜயகாந்த் குடும்பத்திற்கு போன் செய்து பேசி கொண்டுதான் இருக்கிறாராம். எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கலாம் என கூறியிருக்கிறாராம் விஜய். ஆனால் நியாயமாக விஜய்யே முன் வந்து சண்முக பாண்டியனுக்கு அவர் நடித்த படங்களில் வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்கின்றனர் ரசிகர்கள்.

Articles

parle g
madampatty rangaraj
To Top