தலைவர்களின் கதைகளை திரைப்படமாக இயக்குவது என்பது பல காலங்களாகவே சினிமாவில் இருந்து வருகிறது. காந்தி அம்பேத்கர் மாதிரியான தலைவர்கள் குறித்து வட இந்தியாவில் திரைப்படங்கள் வந்துள்ளன.
அதே போல தமிழில் காமராஜர், பெரியார் மாதிரியான தலைவர்களை வைத்து திரைப்படங்கள் வந்துள்ளன. பொதுவாக இந்த மாதிரி தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும்போது அது பார்ப்பதற்கு சுவாரஸ்யமான திரைப்படமாக இருக்காது.
இந்த நிலையில் தற்சமயம் தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவதற்கான பேச்சுவார்த்தை சென்று கொண்டுள்ளதாம். அண்ணாமலை முதலில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர். அதன் பிறகு அரசியலின் மீது ஈடுபாடு கொண்டு அரசியலுக்கு வந்துவிட்டார்.

எனவே அதையே திரைக்கதையே அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் முதல் பாதியில் அண்ணாமலையின் ஐ.பி.எஸ் வாழ்க்கையான போலீஸ் வாழ்க்கையை வைத்து கதை நகர்கிறதாம். அதன் பிறகு அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கையை வைத்து படத்தின் இரண்டாம் பாதி நகர்கிறதாம்.
இந்த படம் ஒரு கமர்ஷியல் திரைப்படம் போல சுவாரஸ்யமான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அண்ணாமலையாக நடிகர் விஷால் நடிக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன.






