Connect with us

பட வாய்ப்பே வேண்டாம்… கமல் செயலால் பயந்து போன இயக்குனர் லிங்குசாமி!..

Cinema History

பட வாய்ப்பே வேண்டாம்… கமல் செயலால் பயந்து போன இயக்குனர் லிங்குசாமி!..

cinepettai.com cinepettai.com

Lingusamy kamal movie : தமிழ் சினிமாவில் ஆனந்தம் என்கிற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. ஆர்.பி சௌத்ரி தயாரித்த ஆனந்தம் திரைப்படம்தான் இவரது முதல் படமாகும். இது கிட்டத்தட்ட வழக்கமாக இயக்குனர் விக்ரமன் எடுக்கும் திரைப்பட பாணியிலேயே எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

ஆனால் படம் கொஞ்சம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஏனெனில் இந்த படத்தில் மம்மூட்டி, முரளி, சினேகா, அப்பாஸ் போன்ற பெரும் நடிகர்கள் நடித்தனர். அதனால் படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது இதனால் படம் வெளியான பிறகு எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

அதன் பிறகு லிங்குசாமி நிறைய திரைப்படங்கள் எடுத்தார். அவற்றில் சண்டக்கோழி, பையா மாதிரியான திரைப்படங்கள் பிரபலமானவை. லிங்குசாமி பையா படத்தை எடுத்த பிறகு அவரிடம் மதி என்கிற ஒரு திரைப்படத்திற்கான கதை இருந்தது.

இந்த கதை கமலுக்காகவே லிங்குசாமி எழுதிய கதை ஆகும். இதை கமல்ஹாசனிடம் போய் சொன்னபொழுது படம் குறைந்த பட்ஜெட் என்பதால் கமலஹாசனும் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதே சமயம் படத்தை தானே தயாரிப்பதாக கமல் கூறி இருந்தார்.

பொதுவாகவே கமல் நடிக்கும் திரைப்படங்களில் அவரது தலையீடு அதிகமாக இருக்கும் என்று இப்போதும் தமிழ் சினிமாவில் பேச்சுக்கள் உண்டு. இந்த நிலையில் அவரே தயாரித்து நடித்தால் கண்டிப்பாக அந்த திரைப்படத்தில் அவரது தலையீடு இருக்கும்.

எனவே நாம் சுதந்திரமாக அந்த படத்தை எடுக்க முடியாது என்று கமலை கண்டு பயந்துள்ளார் லிங்குசாமி. எனவே அந்த படத்தை கடைசி வரை எடுக்காமலேயே இருந்து விட்டார். இதனை தன் பேட்டியில் கூறியிருக்கிறார் லிங்குசாமி. ஒருவேளை கமலை வைத்து லிங்குசாமி படம் எடுத்திருந்தால அவருக்கு அது ஒரு வரவேற்பு மிக்க படமாக இருந்திருக்கலாம்.

To Top