Connect with us

பெரிய ஒழுங்கு மாதிரியே சத்தம் போடுறியே தம்பி!.. நிக்சனை வைத்து செய்யும் நெட்டிசன்கள்!..

nixen archana

Bigg Boss Tamil

பெரிய ஒழுங்கு மாதிரியே சத்தம் போடுறியே தம்பி!.. நிக்சனை வைத்து செய்யும் நெட்டிசன்கள்!..

cinepettai.com cinepettai.com

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தது முதலே அதிகமாக வார்த்தைகளை விடும் ஒரு நபராக நிக்சன் இருந்து வருகிறார். முதலாவதாக பிரதீப்பிற்கு எதிராக நிக்சன் பேசத் தொடங்கிய பொழுது அவர் அடித்தட்டு இடத்தில் இருந்து வந்ததாகவும் இந்த இடத்தை பிடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டதாகவும் நிக்சன் கூறிய பொழுது சாதாரண மக்களின் மத்தியில் இருந்து நிக்சனுக்கு அதிகமாகவே ஆதரவு இருந்தது.

ஆனால் போகப் போக புல்லி கேங் போலவே நிக்சனும் மற்றவர்களை குறை கூறுவதை தினசரி வேலையாக கொண்டிருக்கிறார். அதனையும் தாண்டி கோபப்பட்டு சிலரிடம் பேசும்பொழுது மிகவும் மோசமான வார்த்தைகளை பேசி விடுகிறார்.

இதற்கு முன்பே விசித்ராவுடன் நிக்சனுக்கு பிரச்சனை உண்டான பொழுது அவரிடம் மிகவும் சத்தம் போட்டு இருந்தார் நிக்சன். இந்த நிலையில் இன்று அர்ச்சனாவிடம் சத்தம் போட்டதன் மூலம் மக்கள் மத்தியில் வில்லன் போல பதிவாகிவிட்டார் நிக்சன்.

இன்று அர்ச்சனாவிடம் நிக்சன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வினுஷா குறித்து ஏற்கனவே நிக்சன் தவறாக பேசியதை குறித்து அர்ச்சனா கேட்ட பொழுது வினுஷா விஷயத்தை பற்றி பேசாதீர்கள் என கோபமான நிக்சன் அதோடு சேர்த்து அர்ச்சனாவையும் போடி வாடி என்று திட்ட துவங்கி விட்டார். நீ எல்லாம் பிக்பாஸிற்கு தேவையில்லை இந்த இடத்தை விட்டு போடி என்றெல்லாம் கத்த துவங்கி விட்டார்.

ஏற்கனவே வினுஷா விஷயத்திலேயே பொதுமக்கள் நிக்சன் மீது அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். அவர் என்னதான் அதற்கு நியாயமான விளக்கம் கொடுத்தாலும் அதை இங்கு யாரும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை இந்த நிலையில் பிக் பாஸின் ப்ரோமோ வெளியான நிலையில் அதிலேயே பலரும் நிக்சனுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அர்ச்சனா அழுதது குறித்து நிக்ஸன் இரண்டு வாரங்களாக பேசி வந்தார் ஆனால் அர்ச்சனா மட்டும் நிக்சன் வினுஷாவை பற்றி தவறாக பேசியதை பேசக்கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் பொது மக்கள்.

To Top