Special Articles
ரஜினி கெரியரையே க்ளோஸ் பண்ணிய படங்கள்! – ஏன் ஓடலை தெரியுமா?
என்னதான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் நடிகராக சினிமாவில் வலம் வந்தாலும் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல அவரும் சில ஃப்ளாப் படங்களை சந்தித்துள்ளார்.
இதில் சில படங்களின் பெயர் ரஜினி ரசிகர்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம். இந்த படங்கள் வசூல் மற்றும் கதையம்சத்தால் தோல்வியை தழுவின.
10. குசேலன்
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினியின் சந்திரமுகி ஹிட். அதை தொடர்ந்து மீண்டும் இருவர் கூட்டணியில் வந்த படம் குசேலன். இது மலையாள படமான கதா பரயும்போல் –ன் ரீமேக் படம்.

பணக்கார நடிகர் ஒருவர் தனது பால்ய கால ஏழை நண்பனை மீண்டும் சந்திப்பது கதை. புராணத்தில் கிருஷ்ணர் – குசேலன் இடையே இருந்த நட்பை தழுவி எடுக்கப்பட்ட கதை
இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிகராகவே நடித்திருப்பார். இந்த படத்தில் வரும் வடிவேலுவின் சலூன் கடை சண்முகம் காமெடி இப்போது ஃபேமஸ். ஆனால் கதை முக்கியமாக பசுபதி மற்றும் அவரது குடும்பத்தை சுற்றியே நடப்பதால் ரஜினிக்கு இதில் நிறைய காட்சிகள் கிடையாது.
சந்திரமுகிக்கு பிறகு வந்ததால், ரஜினியின் படம் என ப்ரோமோட் செய்யப்பட்டதால் ஆசையாக வந்த ரசிகர்களுக்கு இந்த படம் நிறைவாக இல்லை.
9. பாபா
ரஜினியை வைத்து பாட்ஷா, அண்ணாமலை போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் படம். ஆனால் கதை, திரைக்கதை எல்லாம் ரஜினியே எழுதியது.

கடவுள் நம்பிக்கையில்லாத, குடிகாரனான ஒருவன் பாபாவை பார்த்து 7 மந்திரங்களை பெற்று ஞானியாக மாறுவதுதான் கதை சுருக்கம்.
அப்போது அடிக்கடி இமயமலை சென்று வந்த ரஜினி, ஆன்மீகம், அரசியல் கலந்து எழுதிய கதை. படம் முழுவதும் ஆன்மீகம், அரசியல் பற்றியே பேசினாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த சுவாரஸ்யம் கிடைக்கவில்லை. ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் இன்றுவரை ஹிட்.
இந்த படங்களை தனியா பார்த்திடாதீங்க – பயங்கரமான 10 பேய் படங்கள்
8. லிங்கா
இதுவும் ரஜினியை வைத்து படையப்பா போன்ற ஹிட் படத்தை கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படம்தான். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தும் கூட ”உண்மை ஒருநாள் வெல்லும்” பாடல் அளவுக்கு மற்ற பாடல்கள் ஹிட் அடிக்கவில்லை.

நீண்ட காலத்திற்கு பிறகு ரஜினி டபுள் ஆக்ட் செய்த படம். திருடனாய் நடப்பு காலத்தில் ஒரு ரஜினி. பெரிய ராஜ வம்சத்து கலெக்டராய் பிரிட்டிஷ் காலத்தில் ஒரு ரஜினி. பிரிட்டிஷ் காலத்து வள்ளல் ரஜினியின் காட்சிகள் ஓரளவு ஒர்க் அவுட் ஆனாலும், திருடன் ரஜினியின் மேக் அப், பாடி லாங்வேஜ் அவ்வளவாக ஈர்க்கவில்லை.
சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதையும் கூடுதல் காரணமாக இருக்க இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
7. கொடி பறக்குது
16 வயதினிலே வெற்றிக்கு பிறகு 10 ஆண்டுக்கால இடைவெளிக்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இயக்குனர் பாரதிராஜாவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்து உருவாக்கிய திரைப்படம் கொடி பறக்குது.

இதில் அப்போது உச்சத்தில் இருந்த அமலா இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவ்வாறு அப்போது தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றினைந்து உருவாக்கியது என்பதால் இந்த படத்திற்கு தமிழகத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாகியது.
இதில் ரஜினி காந்த் போலீஸாக நடித்திருந்தார். தன் தந்தையைக் கொன்றவனை பழிவாங்குவதாக அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை ரசிகர்களை பெரிதும் ஈர்க்கவில்லை. அதனால் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று பெரியளவில் படம் தோல்வி அடைந்தது.
ரஜினிக்கு போன கதையை தட்டித்தூக்கிய தளபதி? – இயக்குனர் இவர்தான்..!
6. வள்ளி
வள்ளி, இத்திரைப்படத்தில் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்திருந்தாலும் இதன் திரைக்கதையை ரஜினி எழுதியிருந்தார் என்பது மிகவும் கவனிக்கத்தக்க திரைப்படமாக மாறியது.

இதனாலேயே தமிழக அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குரிய ஒன்றாக வள்ளி மாறிவிட்டது. வள்ளி திரைப்படத்தின் கதை கதாநாயகி வள்ளியை காதலிப்பதாக சொல்லி, ஏமாற்றி அவளை கர்ப்பமாக்கிவிட்டு சென்னைக்கு சென்றுவிடுகிறான்.
அதற்குபிறகுதான் தெரிகிறது, அவன் முதலமைச்சரின் மகன் என்று. இதற்கு பிறகு வள்ளி, நடத்தும் போராட்டமே இத்திரைப்படம். மிகவும் புரட்சிகரமான கதை, ரஜினிகாந்த் அவர்களின் திரைக்கதை மற்றும் கௌரவ தோற்றம் என பல விஷயங்கள் இருந்தபொழுதும் இத்திரைப்படம் பலத்த தோல்வியுற்றது.
5. பாண்டியன்
ரஜினிகாந்த, தனக்கு பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்த எஸ்.பி.முத்துராமனுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் உதவி செய்யும் நோக்கோடு ஒரு குறுகிய கால சிறிய படத்தினை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு, எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை துவக்கினார்

இத்திரைப்படம் எஸ்.பி முத்துராமன் அவர்களின் விசாலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்டாலும் அதற்கான முழு செலவையும் ரஜினியே ஏற்றுக் கொண்டார். 1991ல் கன்னட திரைப்படமான பாம்பே தாதாவின் ரீமேக்காக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் முதலில் நண்பன் என்னும் பெயரில் வெளியாகுவதாக இருந்தது.
ஆனால் படம் வெளியாகும் முன் பாண்டியன் என பெயர் மாற்றப்பட்டது. இதில் அண்டர் கவர் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்திருந்தார். ஆனால் படம் தமிழக ரசிகர்களை கவரவில்லை. இதனால் படம் மிகப்பெரும் அளவில் தோல்வி அடைந்தது.
ராஜமௌலிக்கு சவால் விடும் பொன்னியின் செல்வன்! – சுதா கொங்கரா சர்ப்ரைஸ்!
4.மாவீரன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆக்ஷன் நடிப்பில் காதல் திரைப்படமாக மிகவும் பிரம்ம்மாண்டமாக உருவாக்கப்பட்ட திரைப்படம் மாவீரன்

இது 1985ல் வெளிவந்த ஹிந்தி திரைப்படமான மார்த் திரைப்படத்தின் ரீமேக்கே மாவீரன் ஆகும். திமிர் பிடித்த ஜமீன்தார் மகள் ரஜினியின் வீரத்தின் மீது காதல் கொள்கிறாள். இதற்கு பிறகு நிகழும் சுவாரசியமான சம்பவங்களே மாவீரன் திரைப்படத்தின் கதை. தமிழில் வெளிவந்த முதல் 70 MM திரைப்படம் இதுவே ஆகும்.
அதோடு ஒலியமைப்பிலும் இளையராஜா 7 ட்ராக்குகளில் ஒலிக்ககூடிய ஸ்டீரியோபோனிக் முறையில் அமைக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுவே ஆகும். இவ்வாறு பல சிறப்புகள் இருந்தாலும் 1986, தீபாவளி அன்று வெளியாகிய திரைப்படம் பலத்த தோல்வியை அடைந்தது.
3. விடுதலை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைத்து நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படம் விடுதலை.

இதில் ரஜினி கில்லாடியான திருடனாக நடிக்க, அவரை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக சிவாஜி கணேஷன் நடித்திருந்தார். இத்திரைப்படம் 1980ல் வெளிவந்த ஹிந்தித் திரைப்படமான குர்பானி படத்தின் ரீமேக்காகும்.
குர்பானி திரைப்படம் 1972ல் வெளிவந்த இத்தாலிய திரைப்படமான The Master Touch திரைப்படத்தின் தழுவலாகும். சிவாஜி, ரஜினி இணைந்து நடிக்கின்றனர் என்பதே இத்திரைப்படத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனாலும் இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பெரும் தோல்வியையே தழுவியது.
இளம் கமலுக்காக காத்திருக்கும் சலாமியா நாட்டு இளவரசி! – வேற லெவல் போகும் விக்ரம்!
2.தர்பார்
தமிழின் மிகவும் புகழ்ப்பெற்ற இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் தர்பார்.

ரஜினிகாந்த் நீண்டநாட்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதே அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. நயன்தாரா கதாநாயகியாக நடித்ததும் படத்தின் மீதான எதிர்பாப்பைக் கூட்டியது.
மும்பையில் இருக்கும் டான்களின் கொட்டத்தை அடக்குவத்ற்காக அங்கு போலீஸ் அதிகாரியாக சூப்பர் ஸ்டார் ரஜினி வருகிறார். அங்கு அவர் நிகழ்த்தும் அதிரடியான செயல்களே இத்திரைப்படம். இருப்பினும் மிக பலவீனமான திரைக்கதையால் படம் மிகப்பெரும் தோல்வியடைந்தது.
1.ஸ்ரீ ராகவேந்திரா
ஒரு நடிகருக்கு 25வது, 50வது, 75வது, 100வது திரைப்படம் என்பது மிகவும் ஸ்பெஷல் ஆனது. எனவே இத்திரைப்படங்களில் தனது ஸ்டார் என்ன மாதிரியான படத்தில் நடிப்பார் என்பது அவரது ரசிகருக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பிவிடும்.

ஆகவே நடிகர்கள் இந்த மாதிரியான எண்ணிக்கைகள் வரும்பொழுது தங்களது படத்தில் மிகவும் கவனம் செலுத்துவார்கள். இத்திரைப்படங்களில் ஆக்சன் அதிகமாகவும், பரபரப்பாகவும் இருக்குமாறு கதைக்களத்தை அமையுமாறு பார்த்துக் கொள்வார்கள்.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய குரு ராகவேந்திராவிற்கு நன்றி செலுத்தும்விதமாக ஶ்ரீ ராகவேந்திரா திரைப்படத்தை உருவாக்கினார். இன்னொருபுறம் ரசிகர்கள் இத்திரைப்படத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
ஆனால் இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது. ரசிகர்களால் தங்களுடைய சூப்பர் ஸ்டார் சாமியாராகவும், சண்டைக்காட்சிகளே இல்லாத ஒரு பக்தி திரைப்படமாகவும் நடித்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ரசிகர்களின் கருத்தினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் பணிவன்புடன் ஏற்றுக் கொண்டார் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.
