Connect with us

வடிவேலு கடைசி வரை ஒத்துக்கல!.. ஆனா அந்த காமெடிதான் செம ஹிட்.. 23 ஆம் புலிகேசியில் நடந்த பிரச்சனை…

23am pulikesi

Cinema History

வடிவேலு கடைசி வரை ஒத்துக்கல!.. ஆனா அந்த காமெடிதான் செம ஹிட்.. 23 ஆம் புலிகேசியில் நடந்த பிரச்சனை…

Social Media Bar

தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் வடிவேலு. வடிவேலுவின் காமெடிக்கு எல்லா காலங்களிலுமே வரவேற்பு இருந்து வந்தது. அதனாலயே மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக வடிவேலு இருந்து வந்தார்.

ஒரு காமெடி நடிகர் என்பதை தாண்டி ஒவ்வொரு படத்திலும் அவருக்கு கொடுக்கப்படும் வித்தியாசமான கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக செய்யக்கூடியவர் வடிவேலு. அது தான் வடிவேலு இவ்வளவு காலம் சினிமாவில் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

ஒரு காலத்திற்குப் பிறகு வடிவேலு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அப்படி கதாநாயகனாக நடித்த வடிவேலுவிற்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது 23ஆம் புலிகேசி. சிம்புதேவன் இயக்கிய இந்த திரைப்படம் வடிவேலுவின் கதாநாயகன் வாழ்க்கைக்கு ஒரு ஆரம்பமாக அமைந்தது.

இந்த படத்தில் பல விஷயங்கள் வடிவேலு சேர்த்தவை என்று கூறப்படுகிறது இருந்தாலும் இதில் ஒரு காட்சியில் வி.எஸ் ராகவன் நீங்கள் இருவரும் ஒன்று சேருவீர்கள் என்று எனக்கு முன்பே தெரியும் என்று கூறுவார். அதற்கு எப்படி என கேட்கும் பொழுது இரட்டை குழந்தைகள் பிறந்து விட்டால் திரைக்கதையில் வேற என்னதான் செய்ய முடியும் என்று கூறுவார்.

இந்த வசனத்தை சிம்பு தேவன் வைக்கலாம் என்று கூறிய பொழுது அதற்கு வடிவேலு ஒப்புக்கொள்ளவில்லை. இது நல்லாவே இல்லை நம்மளே தமிழ் சினிமாவை கேலி செய்வது போல இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் வி.எஸ் ராகவனுக்கும் அதில் உதவி இயக்குனராக பணிபுரிந்த பாண்டிராஜனுக்கும் அந்த வசனம் மிகவும் பிடித்து விட்டது.

எனவே வி.எஸ் ராகவன் இந்த காட்சியை எடுத்து வைத்துக் கொள்வோம் வேண்டாம் என்றால் அதை நீக்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளார். சரி என்று வடிவேலும் ஒப்புக்கொண்டுள்ளார் ஆனால் அந்த காட்சிக்கு தான் திரையரங்கில் அதிக வரவேற்பு கிடைத்தது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் பாண்டிராஜ்.

To Top