News
விடாமுயற்சிக்கு வெயிட் பண்ணியே காலாவதி ஆயிடுவேன் போல.. கடுப்பில் இருக்கும் இயக்குனர்…
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித் குமார், நடிகர் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக அஜித் இருக்கிறார்.
ஆனால் அதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வது போல தெரியவில்லை. துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தது லைக்கா நிறுவனம். இந்த படத்திற்கு கதை எழுதினார் விக்னேஷ் சிவன். ஆனால் அஜித்திற்கு அந்த கதை பிடிக்காத காரணத்தால் அவரை படத்தில் இருந்து எடுத்துவிட்டு மகிழ் திருமேணியை இயக்குனராக அறிமுகப்படுத்தினர்.
ஆனால் இந்த சமயம் பார்த்து வெளிநாடுகளுக்கு டூர் சென்ற அஜித்குமார் இப்போது வரை படம் நடிக்கவே வரவில்லை. படக்குழுவில் துவங்கி இயக்குனர் வரை அனைவரும் அஜித்திற்காக காத்துக்கொண்டுள்ளனர்.
எனவே விடாமுயற்சி திரைப்படம் படமாக்கப்படுமா என்பதே தற்சமயம் கேள்விக்குரியான விஷயமாக உள்ளது. ரசிகர்கள் முதல் இயக்குனர் வரை அனைவரும் இதனால் அதிருப்தியில் உள்ளனர்.
